இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 23 பிப்ரவரி, 2017

ஊழலை ஒழிக்க வாரீர்! - நீதிபதிகள்

Image result for jayalalitha verdict judge amitava roy

"சமூகத்துக்கு கேடு விளைவித்து மூச்சுத் திணறக் கூடிய அளவுக்கு குரல்வளையை நெரிக்கும் இந்தக் கொடிய நிலை மாறி, சுதந்திரமான சமூக ஒழுங்கு தற்போதைய சூழலில் நிலவ வேண்டுமானால், அனைவரும் கூட்டுச் சேர்ந்து, ஈடுபாட்டுடனும் துணிச்சலுடனும் இதுபோன்ற கொடூரத்தை (ஊழல்) எதிர்க்க வேண்டும். சுதந்திரமான, தனித்தன்மை வாய்ந்த இந்தியா மலர வேண்டுமானால், நமது முன்னோர்கள் வகுத்துச் சென்ற பாதையில் ஊழலுக்கு எதிரான நிலையான புனிதத் தன்மையுடன் கூடிய இயக்கத்தில் ஒவ்வொரு குடிமகனும் பங்குதாரராக வேண்டும்" என்று நீதிபதி அமிதவா ராய் கூறியுள்ளார்.

(ஊழலை ஒழிப்பதில் குடிமகனின் பொறுப்பு என்ன-ஏழு பக்க தீர்ப்பில் நீதிபதி விளக்கம்- தினமணி, 15 பிப்ரவரி 2017)

-------------------  
ஊழலுக்கும் அநீதிக்கும் எதிரான இயக்கம்
 ‘ஊழலுக்கு எதிரான நிலையான புனிதத் தன்மையுடன் கூடிய இயக்கத்தில் ஒவ்வொரு குடிமகனும் பங்குதாரராக வேண்டும்’ என்ற நீதிபதி அமிதவா ராய் அவர்களின் கூற்று நாட்டு நலனில் அக்கறைகொண்ட அனைத்துக் குடிமக்களின் எண்ணத்தையும் ஏக்கத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது.
ஆனால் அப்படிப்பட்ட ஒரு இயக்கம் உருவாக வேண்டுமானால் நாம் அடிப்படையில் இருந்து தொடங்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இலஞ்ச ஊழலை மட்டுமல்ல அனைத்து தீமைகளையும் ஒழிக்கவும் மக்கள் இயக்கமாக சேர்ந்து தீமைகளுக்கு எதிராகப் போராடவும் வேண்டுமானால் தனிமனித நல்லொழுக்கமும் சகமனிதன் சகோதரனே என்ற உணர்வும் அடிப்படைத் தேவைகளாகும். இந்த அடிப்படைகளை மக்களுக்கு பயிற்றுவித்து அதற்கான பயிற்சியும் கொடுத்து வளர்த்தால் மட்டுமே இனம் , நிறம் , மொழி, இடம், ஜாதி, மதம் போன்ற காரணங்களால் பிளவுண்டு கிடக்கும் சமூகத்தை ஒருங்கிணைக்கவும் அநியாயத்திற்கு எதிராகப் போராட இயக்கமாக உருவெடுக்கவும் முடியும். இந்த அடிப்படை இல்லாது போனால் நீதிபதி அவர்களின் கூற்று ஒரு தூரத்துக் கனவாகவே நிற்கும்.
உண்மையில் நம்மைப் படைத்த இறைவனே தனிநபர் நல்லொழுக்கத்திற்கும் மனித சமத்துவத்திற்கும்  சகோதரத்துவத்திற்கும் ஆன அடிப்படைப் பயிற்சியை மனித இனம் பூமியில் தோன்றிய காலம் தொட்டே அவ்வப்போது தனது தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் கொடுத்து வந்துள்ளான். அந்த தூதர்கள் பரம்பரையில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி அவர்கள். அவர்கள் மூலமாக அனுப்பப்பட்ட வேதமே திருக்குர்ஆன். படைத்தவனின் எவல்விலக்கல்களை ஏற்று அதன்படி வாழும் வாழ்க்கை நெறியே இன்று இஸ்லாம் என்று அறியப்படுகிறது.
இறைவன் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்:

= மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள்அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான் பின்னர் இவ்விரு வரிலிருந்துஅநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ..... நிச்சயமாக இறைவன் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1) 
அதாவது ஒன்றே மனித குலம்ஒருவனே இறைவன்அவனது கண்காணிப்பின் கீழ் உள்ளோம் நம் வினைகளுக்கு மறுமையில் விசாரணையும் அதற்கேற்ப சொர்க்கமும் நரகமும் வாய்க்க உள்ளது என்ற அடிப்படை உண்மைகளை மனித மனங்களில் விதைத்து அவர்களை சீர்திருத்தி ஒழுக்கம் நிறைந்த ஓர் உலகை கட்டியெழுப்பவே இஸ்லாம் விழைகிறது.

இந்த முக்கியமான நம்பிக்கைகளை பகுத்தறிவு பூர்வமாக மனித மனங்களில் விதைப்பதன் மூலம்  தனி நபர் ஒழுக்கம், மனித சமத்துவம், உலகளாவிய சகோதரத்துவம், இவற்றை நிறுவுகிறது. அநியாயத்தால் ஒடுக்கப்பட்ட மக்களை அவர்களின் அடிமைத் தளைகளில் இருந்தும் அடக்குமுறைகளில் இருந்தும் விடுதலை செய்கிறது. 

உலெகெங்கும் அநீதிகளுக்கும் அக்கிரமங்களுக்கும்  அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடி நீதியை நிலைநாட்டப் பாடுபடுவோருக்கு அவர்களுக்கு அமைப்புகள் இருந்தாலும் சரி, இல்லாவிடினும் சரி அரசாட்சி இருந்தாலும் சரி இல்லாவிடினும் சரி உரிய முறையில் ஊக்கமும் விவேகமான வழிகாட்டுதல்களும்  இங்கு கிடைக்கின்றன.
அநீதியாளர்களும் அநீதிக்கு உள்ளானோரும் சக மனிதர்களே சகோதரர்களே என்ற உணர்வும் மனிதன் மனிதனுக்கு எதிரியல்ல, ஆனால் அவர்களை ஆட்கொள்ளும் ஷைத்தான்தான் உண்மையான எதிரி என்ற உணர்வும் போராடுவோர் மனதில் விதைக்கப் படுவதால் அங்கு தனிமனித மற்றும் இனம்சார்ந்த  பழிவாங்குதல்களும் வீண் உயிர்சேதங்களும் பொருட்சேதங்களும்  தவிர்க்கப் படுகின்றன. போரின் அல்லது போராட்டத்தின் நோக்கம்  சகமனிதனை தண்டிப்பதோ அழிப்பதோ அல்ல, மாறாக அவனை சீர்திருத்துவதே என்ற அடிப்படைக் கொள்கையை இஸ்லாம் கற்பிப்பதால் கடினமான எதிரிகளையும் தன்வயப்படுத்தும் தனித்தன்மையோடு இஸ்லாம் என்ற சீர்திருத்த இயக்கம் உலகெங்கும் வெகு வேகமாகப் பரவி வருகிறது.

http://quranmalar.blogspot.com/2012/10/blog-post.html 
இறைவழி நின்று இலஞ்ச ஊழல் ஒழிப்போம்
http://quranmalar.blogspot.com/2015/06/blog-post_11.html
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக