இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 பிப்ரவரி, 2015

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் யாருடையது..?

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் யாருடையது..?
 இன்று உலகம் முழுவதும் இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு பயங்கரவாதத்தை போதிக்கிறது என்பது ஆகும். உதாரணமாக isis தீவிரவாத அமைப்பை உருவாக்கியது இஸ்லாம்தான் என்று குற்றம்சாட்டுகள் வைக்க படுகிறது......
முதலில் isis அமைப்பு இஸ்லாமிய அமைப்பா..???
ஈராக்கிலும் சிரியாவிலும் மனித நாகரிகம் கண்டிராத காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை இஸ்லாத்தின் பெயரால் நிகழ்த்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ்
இயக்கம் உண்மையில் யாருடையது..?
அதன் நிறுவனரும் தலைவரும் நான்தான் என்று வீடியோக்களில் காட்சியளித்து, தூய அரபிமொழியில் மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கும் அபூபக்ர் அல்பஃக்தாதீ என்பார் யார்.....?
இஸ்லாம் கூறும் அமைதி மார்க்கத்திற்கு நேர் எதிரான நடவடிக்கைகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றிவரும் இந்த காட்டுமிராண்டிகள் யார் என்ற குழப்பம் உலக முஸ்லிம்கள் அனைவரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
இவர்களின் பின்னணி என்ன என்பதெல்லாம் தெரியாமல் உலக முஸ்லிம்களைப் போன்றே நாமும் குழப்பத்தில்தான் இருந்தோம். இந்நிலையில், குவைத்திலிருந்து
வெளிவரும் அல்முஜ்தமாஎனும் இஸ்லாமிய அரபு மாத இதழில் அக்டோபர் (2014)  பிரதியில் ஓர் ஆய்வுக் கட்டுரை.
கட்டுரையை ஃபிரான்ஸ் கலாசாரத் துறை பேராசிரியர் டாக்டர் ஸைனப் அப்துல் அஸீஸ் எழுதியிருக்கிறார்.
இராக் கிறித்தவர்களும் இனப்படுகொலை பற்றிய ஊகங்களும். கட்டுரையின் இறுதியில் டாக்டர் ஸைனப் எழுதியிருப்பதன் தமிழாக்கம் அப்படியே கீழே தரப்பட்டுள்ளது.. நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்:

ஐ.எஸ். இயக்கத்தை அரபி இதழ்கள் சுருக்கமாக தாஇஷ்எனக் குறிப்பிடுகின்றன. இதன் பொருள் அத்தவ்லத்துல் இஸ்லாமிய்யா ’ (இஸ்லாமிய அரசு) என்பதாகும். கிலாஃபத்ஆட்சி என விளக்கம் கூறலாம். இந்த இயக்கத்தின் தலைவர் அபூபக்ர் அல்பஃக்தாதியை பஃக்தாது கலீஃபாஎன அவருடைய. ஆதரவாளர்கள் அழைக்கின்றனர்.
இவரது பின்புலம் குறித்து முன்னணி இணைய தளங்கள், குறிப்பாக ‘Veteran Today’ எனும் இணையதளம் தோலுரித்துக்காட்டியிருக்கிறது
= பக்தாத் கலீஃபா, இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத்தின் கையாள்.
இவர் யூதப் பெற்றோருக்குப் பிறந்தவர்.
= அபூபக்ர் அல்பஃக்தாதியின் உண்மையான பெயர்: ஷைமோன் எலியூட். இவரை இஸ்ரேலின் பயங்கரவாத அமைப்பான மொசாத், தன் உளவுப் பணிகளுக்காக உருவாக்கிப் பயிற்சியையும் அளித்துள்ளது. உளவுத் துறையிலும் வெளியுறவுத் துறையிலும் அவர் பயிற்சியை முடித்துள்ளார். அத்துடன், பல்வேறு இராணுவப்
பயிற்சிகளுக்கும் உட்படுத்தப்பட்டார். பல்வேறு சோதனைகளையும் அவர்.கடந்துவந்துள்ளார்.
இதுவெல்லாம் எதற்காக?
அரபு மற்றும் முஸ்லிம்களின் வாழ்வையும் இஸ்லாமிய சிந்தனைகளையும்
அழிக்கும் சதிவேலைகளுக்கு எலியூட் தலைமை ஏற்க வேண்டும். அழிவு சக்திகளை ஒருங்கிணைத்து வழிநடத்த வேண்டும் என்பதற்காகத்தான்!
இதில் பெரிய வேடிக்கை என்ன தெரியுமா?
= ஐ.எஸ். (Islamic State) அமைப்பு, பயங்கரவாத இயக்கங்களின் ஐ.நா. பட்டியலில் இடம்பெற்றுள்ள அதே வேளையில், அதற்குப் பொருளுதவி செய்வது அமெரிக்காவாகும். 
= 2014 வரி ஆண்டுக்கான இரகசிய கூட்டத்தில் முடிவான சட்டத்திற்கேற்ப ஐ.எஸ். அமைப்புக்குப் பொருளுதவி செய்ய அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. 
இது, 2014 செப்டம்பர் 30 வரைக்குமான ஒப்புதலாகும்.

= இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், 2004 முதல் 2009 வரை 5 ஆண்டு காலம் குவாண்டநாமோ சிறையில் அபூபக்ர் அல்பஃப்தாதி இருந்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் சி.ஐ.ஏ. மற்றும் மொசாத் ஆகிய உளவுத் துறை அமைப்புகள் தம் பணிகளுக்காக ஆள் திரட்டியபோது அபூபக்ரைப் பயன்படுத்த எண்ணின. பல்வேறு நாடுகளில் இருக்கும் முஜாஹித்களை ஒரே இடத்தில் திரட்டுவதற்கு வசதியாக ஒரு குழுவை அமைக்கும் பெரிய பொறுப்பினை அபூபக்ரிடம் அவை கொடுத்தன. 
இக்குழு, முஜாஹித்கள் யாரும் இஸ்ரேலைத் தாக்கிவிடாமல் தடுக்கும் பணியைச் செய்ய வேண்டும் என்பது மொசாத்தின் திட்டமாகும்.
= அபூபக்ர் என்ற ஒற்றரை மொசாத் தேர்ந்தெடுத்ததன் நோக்கம், இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக விளங்குகின்ற நாடுகளின் இராணுவ மற்றும் சிவில் வட்டாரங்களில் ஊடுருவுவதே ஆகும். அகண்ட இஸ்ரேலை உருவாக்குவதற்கு
வசதியாகவும் அந்நாடுகளின் ஒவ்வொரு பகுதிமீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கு வசதியாகவும் சியோனிஸ ஆட்சியை உருவாக்கும் பணியை எளிதாக்க வேண்டும். உலகின் நாலா பாகங்களிலிருந்தும் தீவிரவாதிகளின் ஒரு பெரும்
படையை ஓரிடத்தில் ஒன்றுசேர்த்து, ஷைத்தானின் உண்மையான படை இதுதான் என உலகத்திற்கு  அடையாளம் காட்ட வேண்டும்.
  அவர்கள் லா இலாஹ இல்லல்லாஹ்எனும் கலிமா பொறிக்கப்பட்ட கறுப்புக் கொடியைத் தூக்கிக் காட்டுவார்கள். இதன்மூலம், இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பை உலக மக்களிடம் விதைக்க முடியும் என்பது மொசாத்தின் கனவாகும்.
= இப்படையினர், ஈவிரக்கமின்றி கைதிகளைத் துப்பாக்கியால் சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை செய்வார்கள். இந்தப்பயங்கரமான காட்சிகளைப் படமாக்கி இணையதளம் உள்ளிட்ட ஊடகங்களில் வெளியிடுவார்கள். இவர்கள் இரத்த வெறிபிடித்த காட்டுமிராண்டிகள் என உலகம் அடையாளம் காண வேண்டும்.
யாராலும் சகிக்க முடியாத, மனிதாபிமானமே இல்லாத இந்த நிலைக்கு ஒரு மனிதன் வரவேண்டுமென்றால், ஒன்று அவன் போதைக்கு அடிமையாக இருக்க வேண்டும்; அல்லது இரத்தத்தையும் பயங்கரத்தையும் பார்த்துப் பார்த்துப் பழகிப்போனவனாக இருக்க வேண்டும். 
= இதுதான் அமெரிக்க சியோனிஸ போர் உத்தியாகக் காலம்காலமாக இருந்து வருகிறது.
சுருங்கக்கூறின், ஐ.எஸ். எனும் இந்தப் படைக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் அறவே இல்லை. இது, முஸ்லிம்களின் கரத்தாலேயே இஸ்லாத்தின் மீது போர் தொடுப்பதற்காக அமெரிக்கா நிகழ்த்தும் நாடகமாகும்.

இஸ்லாமிய வெறுப்பை உலக மக்களில் விதைத்து உலகெங்கும் வேகமாகப் பரவிவரும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் என்ற எண்ணமே இதற்குக் காரணம் என்பது தெரிகிறது. ஆனால் இறைவனின் மார்க்கம் அனைத்து சதிகளையும் வென்றே வந்துள்ளது என்பது வரலாறு நமக்கு தரும் பாடமாகும். இவ்வுலகின் உரிமையாளனோ இம்மார்க்கம் அகில உலக மக்களுக்கும் அருட்கொடையாக இறக்கப்பட்ட ஒன்று இதை யாரும் தடுக்க முடியாது என்கிறான் தனது திருமறையில்:
'
தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி)
அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால்
இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவனின் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.' (அல்-குர்ஆன் 9:32)

 
ஆனால் இதன் வளர்ச்சி கண்டு யாரும் கவலை கொள்ள
வேண்டியதில்லை. இது ஒரு இனத்தையோ நாட்டையோ ஒழிக்கவோ அல்லது உயர்த்தவோ வந்ததல்ல. மாறாக தர்மத்தை நிலைநாட்டி பூமியில் அமைதியைப் பரப்ப வந்த ஒன்று எனபதை உணர்ந்துவிட்டால் எதிர்ப்புகள் மறையும். இன்றைய எதிரிகள் நாளை இம்மார்க்கத்தின் காவலர்களாக மாறுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக