இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 18 மார்ச், 2014

நான் ஹிஜாபுக்குள் நுழைந்த கதை! - யுவோன் ரிட்லீ...

(தமிழில்... சகோதரி ஷி:பாயே மரியம், Project Manager, Cognizant)

[யுவோன் ரிட்லீ, பிரிட்டனைச் சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர். ஆப்கானிஸ்தானில் பிரிட்டனின் உளவாளியாக நுழைந்த இவர் பின்னர் தலிபான் இயக்கத்தினரால் பிடிக்கப்பட்டு சிறிது காலம் அவர்களின் கைதியாக இருந்து பின்பு விடுவிக்கப்பட்டார். அவர்களின் பண்பான நடத்தையும் திருக்குர்ஆன் வாசிப்பும் அவரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்க அவர் இஸ்லாத்தை மனமுவந்து தழுவினார். தன் அனுபவங்களை கூற "தாலிபானின் பிடியில்" என்ற புத்தகத்தையும் வெளியிட்டார். இன்று இவர் ஒரு மேற்குலகில் முன்னணி மனித உரிமை மற்றும் பெண்ணுரிமைப் போராளி!]
ஹிஜாப்... உலகின் அனைத்து அரசியல்வாதிகளும் பத்திரிக்கையாளர்களும் விரும்பி விமர்சனம் செய்யும் விஷயம் இது! இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஹிஜாப் என்னும் உடலை மறைக்கும் முழு ஆடை.... அதை அணிந்திருக்கும் பெண்களின் கருத்து என்னவென்று அறிய முற்படாமல் தமக்கு தோன்றியவற்றை எல்லாம்  தங்களுடய கண்ணோட்டமாகப் பிதற்றிகொண்டு திரிகின்றார்கள் இவர்கள்! இந்த அறியாமையை என்னவென்பது?
தன் சொந்தக்கருத்தை மட்டுமே மூலாதாரமாக வைத்துக்கொண்டு எழுதும் இவர்களுக்கு உண்மையில் ஹிஜாபைப் பற்றியும் இஸ்லாம் தன் பெண் மக்களை எப்படிப் பாதுகாக்கிறது என்பதைப் பற்றியும், மொத்தத்தில் 1400  வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட வலுவான இஸ்லாமியக் கட்டமைப்பைப் பற்றியும் எதுவும் தெரியாது.
ஆயினும் அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அரபு நாடுகளில் நடக்கும் குழந்தைத் திருமணம், பெண்களுக்கு செய்யப்படும் கத்னா (விருத்த சேதனம்), கௌரவக்கொலை மற்றும் கட்டாயத் திருமணங்கள் போன்ற அரபுக் கலாச்சாரம் சம்மந்தமானவை மட்டுமே! இவற்றை இஸ்லாத்தோடு இணைத்து இஸ்லாத்தை தவறான கோணத்தில் விமர்சிப்பதில் அகமகிழ்ந்து கொள்கின்றனர்.

அவற்றில் நான் மிகவும் வெறுப்பது என்னவென்றால் சௌதி அரேபியாவை உதாரணம் காட்டுவதும், அங்கு பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்படும்  தடை செய்வதைப்பற்றி விமர்சிப்பதும் ஆகும். இவர்கள் சாடும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் காரணம் ஆகாது. ஆயுனும் அவர்கள் தம் ஆதிக்க பலத்தால் இஸ்லாத்தைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளை எழுதியும் பரப்பியும்  வருகிறார்கள்நான் இவர்களை வேண்டிக்கொள்வது என்னவென்றால்.... ஒரு தூய்மையான மார்க்கத்தை ஒரு கலாச்சார வழக்கத்தோடு முடிச்சுப்போட்டு மக்களை குழப்ப வேண்டாம் என்பதே .

முஸ்லிம் ஆண்கள் தங்கள் பெண்களை எப்படி அடித்து துன்புறுத்துகிறார்கள் என்பது பற்றி எழுதும்படி என்னை கேட்டுக்கொண்டார்கள். ஆனால் இது உண்மைல்ல என்று எனக்கு நன்றாகத்தெரியும். இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் திருக்குரானிலிருந்தும், ஹதீஸ்களில் இருந்தும் சம்மந்தமில்லாத சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாத வாசகங்களையும் எடுத்துக் காட்டுகின்றனர். ஆனால் உண்மையில் "ஒரு உண்மையான அடியான் தன் மனைவியை அடிக்க நேர்ந்தாலும் அது அவள் உடலின் மீது எந்த காயத்தையும் கூட உருவாக்கக் கூடாது" என்று குர்'ஆன் கட்டளை இடுகிறது. இது ஆண்களை எச்சரிக்கை செய்யும் கட்டளையாகவே உள்ளது. மற்ற மதங்கள் இதைப்பற்றி மூச்சுகூட விடுவதில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

சரி... நாம் இப்பொழுது சில சுவையான புள்ளி விபரங்களைச் சற்று பார்ப்போம். தேசியக் குடும்ப வன்முறை ஹாட்லைன் (National Domestic Violence Hotline) கணக்கெடுப்பின் படி வருடத்திற்கு 4 மில்லியன் அமெரிக்கப் பெண்கள் கடுமையான குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப் படுகிறார்கள். சராசரியாக தினசரி 3 பெண்களுக்கு மேல் அவர்களது கணவர்கள் மற்றும் காதலர்களால் (boy friend) கொல்லப்படுகின்றனர். கடந்த 9/11ல் இருந்து 5500 பெண்கள் சாகும்வரை அடிக்கப்பட்டும் வருகின்றனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சிலர் இதை நாகரீக உலகின் மீது போடப்படும் பழி என நினைக்கலாம். ஆனால், பெண்கள் மீது நடத்தப்படும் இந்த வன்முறை ஒரு உலகளாவிய பிரச்னை ஆகும். இப்படிப்பட்ட வன்முறையை நிகழ்த்தும் ஆண்கள், எந்த குறிப்பிட்ட கலாச்சாரத்தையோ மதத்தையோ சேர்ந்தவர்கள் அல்ல.
உண்மை என்னவெனில், உலகின் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் உதை வாங்கிக்கொண்டும், பாலுறவுக்கு கட்டாயப் படுத்தப்பட்டுக்கொண்டும், பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டும் வாழ்நாள் முழுவதும் கழித்துக்கொண்டிருக்கின்றனர். பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை பொதுவானது. மதம், வகுப்பு, அந்தஸ்து, தோலின் நிறம், கலாச்சாரம் இவைகளுக்கு அப்பாற்பட்டது
இஸ்லாம் வரும் முன்பு வரை பெண்கள் மிகவும் கீழ்ததரமானவர்களாகவே கருதப்பட்டு வந்தனர். உண்மை என்னவெனில், மேற்கத்திய ஆண்கள் இன்னுமே தங்களைப் பெண்களை விடவும் மிக உயர்வானவர்களாகவே நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இதன் விளைவுகள் இன்றும் கீழ் மட்டத்திலி்ருந்து உயர் பதவிகள் வரை வேலை பார்க்கும் பெண்களுக்கு, வழங்கப்படும் ஊதியம் மற்றும் பதவி உயர்வு போன்றவற்றில் பிரதிபலிப்பதைக் காண்கிறோம்.
மேற்கத்தியப் பெண்கள் இன்றும் ஒரு விற்பனைச் சரக்கு போன்றே நடத்தப் படுகின்றனர். அவர்கள் பெருகிவரும் பாலியல் அடிமைத்தனம், விரும்பத்தகாத விற்பனை யுக்திகள், பெண்களின் உடலை வியாபாரப் பண்டமாகவும் விளம்பரச் சரக்காகவும் பயன்படுத்துதல் போன்றவற்றுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.  இங்கு பாலியல் பலாத்காரம், கொடுமை மற்றும் வன்முறைகள் தினசரி நிகழ்வுகளாகவும், ஆண் பெண் சமத்துவம் என்பது  ஒரு வெற்று மாயையாகவும் உள்ளது. பெண்களின் செல்வாக்கு அவர்களின் மார்பகங்களின் அளவு சம்மந்தப்பட்டதாகவும் அமைந்துள்ளது
முன்பெல்லாம் முக்காடு அணிந்து செல்லும் பெண்களைக் கண்டால் எனக்கு அவர்கள் வாயில்லா ஜீவன்களாகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் தென்பட்டனர். ஆனால் இஸ்லாத்தை நான் அறிந்த பிறகு அவர்கள் எனக்கு பலசெயல் திறங்களையும், ஆற்றலையும், எந்த சூழ்நிலையையும் சமாளிப்பவர்களாகவும், சகோதரத்துவத்தின் அடயாளமாகவும் காணப்படுகிறார்கள். இன்று இவற்றிற்குமுன் மேற்கத்திய பெண்ணியத்தை ஒப்பிடும்போது அது அறியாமையின் ஏமாற்றத்தின் உச்ச்சகட்டமாகப் படுகிறது! 

செப்டெம்பர் 2001ல், நான் ஆஃப்கானிஸ்தான் எல்லையில் புர்கா அணிந்து திருட்டுத்தனமாக நுழைய முற்பட்டபோது, தாலிபான் இயக்கத்தினரால் கைது செய்யப்பட்டேன். அச்சம்பவம் என்னை மிகுந்த பயத்துக்குள்ளாக்கியது.


(தொடரும் இன்ஷாஅல்லாஹ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக