இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 29 மார்ச், 2024

இனவெறிக்கு துணைநின்ற நாத்திகம்!

 = மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும்தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 49:13)

ஒரே ஒரு மனித ஆண்-பெண் ஜோடியில் இருந்துதான் மனித குலம் உருவாயிற்று என்ற உண்மையை இஸ்லாம் உறுதிபடச் சொல்கிறது. உலகில் பரவியுள்ள அனைத்து மனிதர்களும் ஒரே போல உடலமைப்பையும் இயற்கையையும் பெற்றிருப்பதே இதற்கு மாபெரும் சான்றாக விளங்குகிறது. இதுதான் மனித சமத்துவத்துக்கும் உலகளாவிய சகோதரத்துக்கும் அடிப்படை ஆதாரம்.

ஒருபுறம் கடவுளின் பெயரால் சிலர் இனவெறியும் தீண்டாமையும்  விதைத்துக்கொண்டிருக்க மறுபுறம் நாத்திகமும் தன் அறியாமைக் கொள்கைகளின் காரணமாக மனித சமத்துவத்தை மறுத்தது. உறுதியான ஆதாரங்கள் அறவே ஏதும் இல்லாத  பரிணாமவியல் என்ற ஊகக் கோட்பாட்டை அறிவியல் என்ற பெயரில் போதித்தது அது. அதன்படி இவ்வுண்மையை மறுத்து குரங்கில் இருந்துதான் மனிதன் உருவானான் என்ற ஆதாரமற்ற ஊகத்தைப் பரப்பியது.

கொடூர விளைவுகள்:


 அதனால்  வரலாற்றில் உண்டான விளைவுகள் கொஞ்ச நஞ்சமல்ல! ஒவ்வொரு இனத்துக்கும் மூதாதையர் குரங்குகள் வேறுவேறு என்ற காரணம் காட்டி மனிதனின் தோற்றம், நிறம், கலாச்சாரம் போன்றவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வழக்கமும் உருவானது. பல்லாயிரக்கணக்கான மக்களை அது காவுகொண்டது. உதாரணமாக ஹிட்லர் தன் நாஜி இனமே உலகில் மற்றெல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று கூறி மற்ற நாடுகளை அடிமைபடுத்தவும் மக்களைக் கொன்று குவிக்கவும் செய்தார். கருப்பர்கள் (நீக்ரோக்கள்) ஒருபோதும் வெள்ளை இனத்தாருக்கு சமமாக முடியாது என்று சொல்லி அவர்களை தாழ்த்தி வைக்கவும் செய்தார்.

கொஞ்சநஞ்சம் மக்களிடம் இருந்து வந்த இறையச்சம் என்ற பொறுப்புணர்வை அறவே துடைத்தெறிந்தது நாத்திகம். யாருக்கு எந்தக் கொடுமைகள் செய்தாலும் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வை ஆதிக்க சக்திகளுக்குள் அது புகுத்தியது. ஆயுத ஆதிக்கம் வாய்த்த  வெள்ளையர்கள் அவர்கள் பிடித்தெடுத்த கண்டங்களில் வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடியினரை ஈவிரக்கமின்றி கொன்று குவிப்பதற்கும் ஆப்பிரிக்கக் காடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த கறுப்பின


மக்களை ஆயுத முனையில் கீழடக்கி அமேரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்திச்சென்று அடிமை வாணிபம் செய்ததற்கும் நாத்திகக் கொள்கை உருவாக்கிய மனோநிலை பெரிதும் துணைபோயிருக்கிறது என்பதே உண்மை.

இறைவனின் எச்சரிக்கை

இறைவனின் பெயரால் இனவெறி கடைபிடித்த ஆத்திகர்களாயினும் சரி இறைமறுப்பை கைகொண்டு இனவெறி பாராட்டிய நாத்திகர்களாயினும் சரி அவர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சரி இறுதித் தீர்ப்பு நாளன்று இறைவன் முன்னால் விசாரிக்கப்பட உள்ளார்கள் என்பது மட்டும் உறுதி. இறைவன் கற்பித்த மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் மறுத்து சக மனிதனின் உரிமைகளை சூறையாடிய ஆத்திகர்களுக்கும் நாத்திகர் களுக்கும் கடுமையான தண்டனைகள் இறைவனிடம் உள்ளன.

= வரவிருக்கும் அந்நாளில் (ஏற்படக்கூடிய அவமானத்திலிருந்தும் தண்டனைகளிலிருந்தும்) நீங்கள் உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்! அன்று இறைவனின் பக்கம் நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். பிறகு ஒவ்வொருவருக்கும் அவரவர் சம்பாதித்தவற்றிற்கான (நன்மை அல்லது தீமைக்கான) கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். இன்னும் எவர் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. (திருக்குர்ஆன் 2:281)

= “நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள் ஒப்படைப்பீர்கள். எந்தளவுக்கென்றால், கொம்பில்லாத ஆட்டுக்காக (அதை முட்டிய) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும்” (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 5038).

= “மறுமை நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் நாம் கொண்டுவருவோம். கணக்கெடுக்க நாமே போதும்”. (திருக்குர்ஆன் 21:47)

=============== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

புதன், 27 மார்ச், 2024

வணக்கத்துக்குரியவன் இறைவன்றி வேறு யார்?

இஸ்லாம் என்ற இறைதரும் வாழ்வியல் கொள்கையின் முக்கிய அடிப்படை இதுதான். மக்கள் படைத்தவனை மட்டுமே வணங்க வேண்டும். அவனது படைப்பினங்களையோ அல்லது மனிதர்களாகவே உருவாகிக் கொண்ட கற்பனை உருவங்களையோ வணங்கக் கூடாது. அவ்வாறு வணங்கும்போது ஏற்படும் குழப்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல..
- இறைவனைப் பற்றிய மரியாதை உணர்வு அகன்று விடுவதால் இறையச்சம் என்ற பொறுப்புணர்வு மனித மனங்களில் இல்லாமல் ஆகி விடுகிறது. சமூகத்தில் பாவங்கள் அதிகரிக்க இது முக்கிய காரணியாகி விடுகிறது. 
- பல்வேறு கடவுளர்கள் கற்பிக்கப்படுவதால் அதைப் பொறுத்து ஒரே மனித குலத்தில் பிளவுகள் உண்டாகுதல், ஜாதிகள் மற்றும் தீண்டாமை போன்றவை உருவாகுதல். 
- கடவுளின் பெயரால் மூட நம்பிக்கைகள், சுரண்டல்கள் போன்றவை உருவாகுதல். 

ஆனால் உண்மைக் கடவுளை எவ்வாறு அறிவது? 

அதற்கு இறைவேதம் திருக்குர்ஆன் படைப்பினங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும், நாம் அன்றாடம் அனுபவிக்கும் அத்தியாவசியமான அருட்கொடைகளையும்  பகுத்தறிவு கொண்டு சிந்தித்து படைத்தவனை அறிந்து அவனுக்கு நன்றி கூறும் முகமாக அவனை வணங்குமாறு கற்பிக்கிறது. அப்படிப்பட்ட ஏராளமான வசனங்களை நீங்கள் திருக்குர்ஆனில் காணலாம். உதாரணமாக கீழ்கண்ட வசனங்களை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்: 

 வானங்கள், பூமி, மழை, மரங்கள், தோட்டங்கள்:
27:60. அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.
பூமி, ஆறுகள், மலைகள், கடல்கள்,தடுப்பு 
27:61. இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
பிரார்த்தனைக்கு பதில், துன்பம் நீக்குதல்
27:62. கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும்.
இருள்களில் வழிகாட்டல், மழைக்கு முன் நற்செய்தி கூறும் காற்று: 
27:63. கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய “ரஹ்மத்” என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? - அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.
இல்லாமையில் இருந்து படைபைத் துவங்குதல், இனப்பெருக்கம், படைப்பினங்களுக்கு உணவளித்தல்,  
27:64. முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.”

பகுத்தறிவு கொண்டு நேர்மையாக சிந்திக்கும் போது இவ்வுலகைப் படைத்த அந்த ஏக இறைவனைத் தவிர வேறு யாரும் எந்த சக்தியும் இவற்றை நிகழ்த்தவில்லை என்பதை அறியலாம். உண்மை இப்படி இருக்க படைத்தவன் அல்லாதவற்றை இறைவன் என்று சொல்வதும் அவற்றை வணங்குவதும் முற்றிலும் அறியாமையே! இது படைத்தவனுக்கு செய்யும் மாபெரும் நன்றிகேடாகும். 
"நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” (திருக்குர்ஆன் 31:13)
இந்த நன்றிகேட்டிற்கு இறைவனிடம் கடுமையான தண்டனை உண்டு என்கிறது திருக்குர்ஆன். 
இறைமறுப்பாளர்களின் அறிவற்ற வாதம் 
ஆனால் இந்த அப்பட்டமான உண்மையை பகுத்தறிவு என்ற பெயரில் மறுக்கும் செயல்தான் ஆச்சரியமானது. 
சில "பகுத்தறியா வாதிகள்" இயற்கைதான் இதைச் செய்கிறது என்று காரணம் கூறுவதை நீங்கள் காணலாம். ஆனால் இயற்கை என்ற கற்பனைப் புனைவுக்கு சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் பகுத்தறிவோ ஆற்றலோ கூட எதுவும் கிடையாது என்பதை சிந்தித்தாலே இது ஒரு பொய்யான வாதம் என்று உணரலாம். இவர்களைப் பார்த்து இறைவன் கேட்கும் கேள்விகள் இவை: 
52:35. அல்லதுஅவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனராஅல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?
52:36. அல்லதுவானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? ......
--------------------------------------------------
56:57. நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?
56:58. (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
56:59. அதை நீங்கள் படைக்கிறீர்களாஅல்லது நாம் படைக்கின்றோமா?
56:60. உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்எனவே நம்மை எவரும் மிகைக் முடியாது.
56:61. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).
================= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?

திங்கள், 25 மார்ச், 2024

சமத்துவம் பூக்கும் சோலைகளே பள்ளிவாசல்கள்


 ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற முழக்கத்தையும் யாதும் ஊரே யாவரும் உறவே என்ற முழக்கத்தையும் பலரும் முழங்கினாலும் அதை அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டும் இடம் பள்ளிவாசல்கள் மட்டுமே!   உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரர், எளியவர், வெள்ளையர், கறுப்பர் என்ற வேறுபாடின்றி தீண்டாமை எழுவதற்கு வழியின்றி எல்லோரும் வரிசையில்  நின்று தொழும் இடம் பள்ளிவாசல். படைத்தவனுக்கு முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை மக்கள் உள்ளங்களில் ஆழமாக விதைக்கும் இடம் அதுவே!

பள்ளிவாசல்கள் என்றால் என்ன?

படைத்த இறைவனை பலரும் கூட்டாக சேர்ந்து நின்று தொழுவதற்காக காட்டப்படும் ஆலயமே  பள்ளிவாசல் என்பது. அங்கு வருவோர்  கை,  கால், முகம் இவற்றை கழுவுவதற்கு வசதியாக தண்ணீர் தொட்டியோ குழாய்களோ முன்னால் காணப் படும். உள்ளே நீங்கள் சென்று பார்த்தீர்களானால், உருவப் படங்களோ, சிலைகளோ எதுவுமே இராது. தரையில் பாய் விரிக்கப் பட்டு இருக்கும், சுவர்களில் எந்த வகையான சித்திரங்க இல்லாமல் காலியாக இருக்கும். 5 வேளைகளிலும் தொழுகைக்கான அழைப்பு  ஒலிபெருக்கி மூலம் விடப்படுகிறது.   இதைச் செவியுறும் ஆங்காங்கே உள்ள முஸ்லிம்கள் உடனடியாக தொழுகைக்கு விரைவார்கள். அனைவரும் வந்ந்து சேர்ந்ததும் தோளோடு தோள் சேர்ந்து வரிசைகளில் அணிவகுத்து நிற்பார்கள்.

தொழுகையாளிகளில் குரான் அதிகம் அறிந்தவர் அணிவகுப்பில் தளபதியைப்  போல் முன் நின்று தொழுகையை நடத்துவார். அவருக்கு அரபு மொழியில் இமாம் என்று கூறுவர். மற்றவர்கள் அவர் செய்வதைப் போலவே செய்து தொழுகையை நிறைவு செய்வார்கள். தொழுகை முடிந்ததும் தத்தமது இருப்பிடங்களுக்கும் அலுவல்களுக்கும் திரும்புவார்கள். இங்கு காசு, பணம், காணிக்கை,பழம், பூ போன்ற எந்த செலவுகளுக்கும் இடமில்லை. பொருட்செலவு இல்லாத சடங்குகள் இல்லாத - இறைவனை நேரடியாக வணங்குவதற்கு உரிய இடம் பள்ளிவாசல்

சமத்துவமும் சகோதரத்துவமும்

சமூகத்தில் செல்வாக்குள்ளவர், அந்தஸ்துள்ளவர்,  படிப்பால் உயரந்தவர், செல்வம் படைத்தவர் என்ற  கௌரவம் பெற்றவர்கள் கூட பள்ளிவாசலுக்குள் வந்து விட்டால், தொழுகைக்காக நின்று விட்டால்  இறைவனின் அடிமைகள் என்ற நிலைப்பாட்டிலேதான் நிற்க வேண்டும். ஜனாதிபதியாக இருந்தாலும், மந்திரிகளாக இருந்தாலும் அவர்களும் சாதாரண குடிமக்களோடு தோளோடுதோள் இணைந்து வரிசைகளில் அணிவகுத்து நின்றே தொழுகை நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கான பிரேத்தியகமான இடமோ கவனிப்போ கிடையாது. ஒரு நாளைக்கு ஐந்து நேர தொழுகையின் பயிற்சி இதுதான். இந்தப் பயிற்சியினை பெற்றவர்களால் மட்டும்தான் உலகில் தீண்டாமையை ஒழிக்க முடியும். சகோரத்துவத்தை வளர்க்க முடியும். சமூகத்தை சீரமைக்க முடியும்.

நபிகள் நாயகம் இஸ்லாத்தை போதிக்க ஆரம்பித்ததன் பின் உலகில் நடந்துள்ள மாற்றங்களைப் பாருங்கள். உலகெங்கும் வாழும் முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள், உதாரணமாக இந்திய முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் இவர்கள் யாருமே அரபு நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களோ நபிகள் நாயகத்தின் வாரிசுகளோ அல்ல. இவர்கள் இதற்கு முன் இந்துக்களாகவோ கிறிஸ்துவர்களாகவோ இருந்து இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்றுக்கொண்டவர்களின் தலைமுறையினர்தான். இவர்கள் இந்த ஏக இறைகொள்கையை ஏற்றுக் கொண்டபின் என்னென்ன புரட்சிகள் நடந்துள்ளது பாருங்கள். இன்று இவர்களுக்கு ஜாதிகள் இல்லை. இவர்களிடையே தீண்டாமை இல்லை. ஒரு காலத்தில் தீண்டாமையால் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று சிதறுண்டு கிடந்தார்கள். இம்மக்களை இன்று பள்ளிவாசல்களில் தொழுகைக்காக ஒரே அணியில் தோளோடு தோள் நிற்க வைப்பதும் ஒரே தட்டில் பாகுபாடின்றி உண்ண வைப்பதும் இந்த ஓரிறைக்கொள்கை நிகழ்த்தி வரும் அற்புதங்களே!

தனிநபர் நல்லொழுக்கமும் பள்ளிவாசல்களும்

மக்கள் அங்கத் தூய்மை பேணி தினசரி ஐந்து வேளைகள் இறைவன் முன்னால் பயபக்தியோடு நின்று தொழும்போது இறை உணர்வு அவ்வப்போது புதுப்பிக்கப்படுவதால் மது போதை மட்டுமல்ல, மற்றெந்த பாவங்களின் பக்கமும் மனம் ஈர்க்கப்படுவதில்லை. மேலும் இந்தத் தொழுகைகளை அவ்வப்போது பள்ளிவாசல்களில் ஒன்று கூடி நிறைவேற்றும்போது ஏனைய மக்களோடு ஏற்படும் சகோதரத்துவ உணர்வும் தொடர்ச்சியான நல்லோர் சகவாசமும் பாவங்களில் இருந்து பாதுகாக்கும் வலுவான அரணாக அமைகின்றன.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குளிப்பதையும் அன்று மதியம் பள்ளிவாசல்களில் ஜும்ஆ எனப்படும் கூட்டுதொழுகையில் கலந்து கொள்வதையும் கட்டாயமாக்கி உள்ளது இஸ்லாம். தொழுகைக்கு முன் நடத்தப்படும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி போதனையும் மனிதனை நல்வழிப்படுத்துபவையாக உள்ளன.

-------------------- 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?

ஞாயிறு, 24 மார்ச், 2024

இறைவனே தீண்டாமைக்கு சாவுமணி அடித்த தருணம்!

 


மனித வரலாற்றை திருத்தி எழுதிய நிகழ்வு அது! உண்மையில் அதுவே வரலாற்றின் ஒரு மிகப்பெரிய திருப்பு முனையும் கூட!

மனிதன் சக மனிதனைப் பார்க்கும் பார்வையை மாற்றி அமைத்த நிகழ்வு அது!

உலகெங்கும் மானிடப் பூங்காக்களில் சமத்துவப் பூக்கள் துளிர்விடத் துவங்கிய நாளேன்றே அந்நாளைக் கூறலாம்!

இனம், நிறம், மொழி, குலம், கோத்திரம் ஜாதி இவற்றின் பெருமைகளைக் கூறி மனிதர்களின் மத்தியில் வேறுபாடுகளை விதைத்து அதன் மூலம் பிற மனிதர்களின் உரிமைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு இருந்த தீய பழக்கத்திற்கு சாவுமணி ஒலிக்கத் துவங்கியது அதற்குப் பிறகுதான்!

இஸ்லாம் என்பது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழுதல் என்ற கட்டுக்கோப்பான வாழ்க்கை முறை. இதை நோக்கியே ஒவ்வொரு காலகட்டங்களிலும் உலகின் பல்வேறு பாகங்களுக்கும் வந்த இறைவனின் தூதர்கள் தத்தமது மக்களை அழைத்தார்கள். இதை இறுதியாக மறு அறிமுகம் செய்ய வந்தவரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

அனாச்சாரங்களில் மூழ்கியிருந்த மக்கா!

நபிகளார் பிறந்த மண்ணான மக்கா நகரத்தில்  அனாசாரங்களும் மூடநம்பிக்கைகளும் அநியாயங்களும் அட்டூழியங்களும் வெகுவாகப் பரவியிருந்தன. அங்கு மக்கள்   முன்னோர்கள் விட்டுச்சென்ற மூடமான பழக்கவழக்கங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்தனர். அறிமுகமே இல்லாதவர்களுக்கெல்லாம் சிலைகள் வைத்து வணங்கினார்கள். கடவுளின் பெயரால் புரோகிதர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளையும் வீண் சடங்குகளையும் மறுகேள்வி கேட்காமல் பின்பற்றினார்கள். பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர், மது குடித்தனர், மனித உயிர்களை துச்சமாக மதித்தனர், பெண்களை அடிமைகளாக நடத்தினர், அற்ப விஷயத்திற்காக பல ஆண்டுகள் தொடராக சண்டை இட்டுக் கொண்டனர்,  நிறவெறி,  கோத்திரவெறி, தேசியவாதம், சாதியம் போன்ற தீமைகள் கட்டுக்கடங்காமல் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

இறைத்தூதராக நபிகளார்

இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில்தான் நபிகள் நாயகம் அவர்களது நாற்பதாவது வயதில் இறைத்தூதராக இறைவனால் நியமனம் செய்யப் படுகிறார்கள்.

அமைதியின்மை மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்த அந்நாட்டில் நபிகள் நாயகம்(ஸல்) இஸ்லாம் என்ற சீர்திருத்தக் கொள்கையை அறிமுகப்படுத்தி அதன்பால் மக்களை அழைத்தார்கள்.

இக்கொள்கையின் முக்கிய போதனை படைத்த இறைவனை மட்டுமே வழிபட வேண்டும் என்பதும் அவனை நேரடியாக இடைத் தரகர்கள் இன்றியும் வீண் சடங்கு சம்பிரதாயங்கள் இன்றியும் வணங்க வேண்டும் என்பதும் ஆகும். அது மட்டுமல்ல இறைவன் அல்லாத எதனையும் அதாவது மனிதர்களையோ மற்ற படைப்பினங்களையோ அல்லது உயிரும் உணர்வுமற்ற கற்களையோ உருவங்களையோ வணங்குவதும் அவற்றைக் கடவுள் என்று அழைப்பதும் அவற்றிடம் பிரார்த்திப்பதும் பெரும் பாவமாகும் என்றும் இக்கொள்கை கூறுவதை நபிகளார் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

ஆனால் முன்னோர்களின் பழக்கவழக்கங்களே  சரி என்று மூடமாக நம்பியிருந்தவர்களும் கடவுளின் பெயரால் மக்களைச்  சுரண்டிக் கொண்டிருந்தவர்களும் இதைப் பொறுத்துக்கொள்வார்களா? கற்பனை செய்து பாருங்கள்! நம்நாட்டுச் சூழலில் ஏதேனும் ஊரில் பெரும்பான்மை மக்கள் ஒரு தேர்த்திருவிழாவை நடத்திக்கொண்டு இருக்கும்போது அம்மக்களிடம் சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைத்துப் பேசினால் என்ன நடக்கும்?  யோசித்துப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.

ஆம், நபிகளாரும் அவரோடு  சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்களும் பயங்கரமான எதிர்ப்புகளையும் சித்திரவதைகளையும் சந்திக்க நேர்ந்தது. ஆனாலும் இறைவனின் உதவியாலும் நபிகளாரின் துவளாத பிரச்சாரத்தினாலும் கொள்கை உறுதிப்பாட்டினாலும் இஸ்லாம் தடைகளை மீறி வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது.

சத்தியத்தின் வளர்ச்சி

நாட்கள் செல்லச்செல்ல இஸ்லாத்தின் கொள்கைகளை தங்களின் சூழ்ச்சிகளால் வென்றெடுக்க இயலாது என்பதை மக்கத்து (இறை) நிராகரிப்பாளர்கள் உணர்ந்தனர்.  முஹம்மது (ஸல்) அவர்கள் இறைசெய்தி என்று கூறுவது அனைத்தும் அவர்களின் சொந்த கருத்தல்ல மாறாக அனைத்துலகையும் படைத்த இறைவனால் அருளப்படும் இறைச்செய்தியே என்பதை அறிந்து கொண்ட அக்குறைஷித் தலைவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களிடம் ஒரு நிபந்தனையின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். நிபந்தனை என்னவெனில் அக்குறைஷித் தலைவர்கள் இஸ்லாத்தை ஏற்றபின் அவர்கள் இருக்கும் அவையில் தாழ்ந்த குலத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றவர்கள் அவர்களோடு அமர்ந்துவிடக்கூடாது என்கின்றனர். முதலில் இந்நிபந்தனையை ஏற்றுக்கொண்டு அக்குறைஷித் தலைவர்களை இஸ்லாத்தை ஏற்கச்செய்யலாம், பின்னர் இஸ்லாத்தின் சீரிய கொள்கைகளை அறிந்தபின் தங்களின் நிபந்தனையின் தவறை தாங்களாகவே உணர்ந்து விளங்கிக் கொள்வார்கள் என்ற முடிவு நபி (ஸல்) அவர்களின் எண்ண ஓட்டத்தில் இருந்தது.

சமத்துவத்தில் சமரசமில்லை!

அந்த தருணத்தில் குறைஷிகளின் தாழ்ந்த குலத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றிருந்த  அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரழி) என்ற கண்பார்வையற்ற ஒரு நபித்தோழர் அந்த அவைக்கு வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் உரைக்கிறார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் போன்றவர்கள் தாங்கள் அமர்ந்திருக்கும் சபைக்கு வரக்கூடாது என்ற நிபந்தனையைப் பற்றித்தானே குறைஷித்தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறனர். இந்த நேரத்தில் இவர் அவைக்கு வருகிறாரே என்று முகம் சுளிக்கின்றனர்.

உதாரணமாக, நாட்டின் ஜனாதிபதியிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு இனப்போராளித் தலைவனை அந்நேரம் பார்த்து ஓர் அடிமட்டத் தொண்டன் தொடர்ந்து செல்பேசியில் அழைத்தால் அத்தலைவனின் நிலையை நீங்கள் கற்பனை செய்யமுடியும். இங்கு நபிகளார் சுயலாபத்துக்கான பேச்சுவார்த்தை அல்ல. பொது நலனுக்கான ஒரு சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ள வேளையில் நடந்த இந்த எதிர்பாராத குறுக்கீடு நபிகளாரை அதிருப்தி கொள்ள வைத்தது.

ஆதிக்க சக்திகளுக்கு இறைவனின் எச்சரிக்கை!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முகம் சுளித்தது கண்பார்வையற்ற அந்நபித்தோழருக்கு தெரியாது. இருப்பினும் இறைவன் புறத்திலிருந்து கடுமையான வாசகங்களோடு எச்சரிக்கை வருகிறது. 'அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்' என்று துவங்கும் 'அபஸ' என்ற 90 ஆவது அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை இறைவன் உடனடியாக அருளினான். அக்குறைஷித் தலைவர்களுக்காக ஒரு பாமர இறைவிசுவாசியிடம் முகத்தைத் திருப்பிக்கொள்கிறீர். இஸ்லாத்தை புறக்கணிக்கும் அந்நிராகரிப்பாளரை நேசங்கொண்டு ஒரு இறைவிசுவாசியை புறக்கணிக்கிறீர் என்று நபி (ஸல்) அவர்களைக் கண்டிக்கின்றான். தங்களின் திட்டத்தை உடனடியாகக் கைவிடுகிறார்கள் நபிகளார்! அன்று முதல் மனித உறவுகளில் புது நடைமுறை அமுலுக்கு வருகிறது. மனித வரலாற்றை திருத்தி எழுதிய அந்த திருமறை வசனங்கள் இவையே:

80:1,22. தன்னிடம் பார்வையிழந்தவர் வந்ததற்காக- (நமது நபியாகிய) அவர் கடுகடுத்தார்; மேலும், புறக்கணித்தார்.

80:3. (நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக ஆகிவிடக் கூடும் என்பதை உமக்கு எது அறிவித்தது?

80:4. அல்லது அவர் (உம்முடைய உபதேசத்தை) நினைவுபடுத்திக் கொள்பவராகலாம்; அப்போது அவ்வுபதேசம் அவருக்குப் பயனளிக்கும்.

80:5,66. ஆகவே, எவன் பொருளாதார மேம்பாடு உடையவனோ- அவனுக்காக நீர் செவிமடுக்கிறீர்.

80:7. மேலும், அவன் (இஸ்லாத்தை ஏற்காது) பரிசுத்தம் அடையாவிட்டால் உம்மீது குற்றமில்லை.

80:8. இன்னும், எவர் உம்மிடம் விரைந்தவராக வந்தாரோ அவர்,

80:9,10 அவரோ (அல்லாஹ்வைப்) பயந்த நிலையில் (உம்மிடம் வர) அப்போது அவரை விட்டும் நீர் அசட்டை செய்கிறீர்.

80:11,12 அவ்வாறன்று! நிச்சயமாக (குர்ஆனாகிய) இது உபதேசமாகும். எனவே, எவர் (இதனைக்கொண்டு நேரான வழியில் செல்ல) நாடுகின்றாரோ அவர் இதனை நினைவு கொள்வார்.

இஸ்லாத்தின் உறுதியான நிலைப்பாடு

இந்த சம்பவம் மூலமாக இஸ்லாம் என்ற இறைவனின் மார்க்கத்தின் உறுதியான தெளிவான நிலைப்பாடு உலகறிய பறைசாற்றப் படுகின்றது. இது உலகைப் படைத்தவன் வழங்கும் வாழ்க்கைத் திட்டம். கெஞ்சிக்கூத்தாடி இதை யார் காலடியிலும் சமர்பிக்க வேண்டியதில்லை.

எந்த ஒரு மனிதனுக்காகவும் குலத்துக்காகவும் நாட்டுக்காகவும் தலைவர்களுக்காகவும் இஸ்லாம் என்ற கொள்கை வளைந்து கொடுக்காது. சந்தர்பவாதத்திற்கு இங்கு இடம் கிடையாது! இதை ஏற்போர் ஏற்கட்டும். மறுப்போர் மறுக்கட்டும். இனம், நிறம், குலம், ஜாதி, செல்வம், செல்வாக்கு, ஆதிக்கம் போன்ற எந்த அடிப்படையிலும் மனிதன் பிற மனிதனை விட உயர்வு பெற முடியாது.

இறையச்சத்தால் மட்டுமே ஒருவர் மற்றவரை விட உயர முடியும் என்கிறான் இறைவன்!

 மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 49:13)
============== 
இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?

செவ்வாய், 16 ஜனவரி, 2024

திருக்குர்ஆன் கற்றுத் தரும் நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்


 அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய ஏக இறைவனின் திருப்பெயரால்.......

திருக்குர்ஆன் கற்றுத் தரும்

நோய் நிவாரணமும் பாவ நிவாரணமும்

திருக்குர்ஆன் என்பது என்ன?

திருக்குர்ஆன் என்பது இந்த அகிலத்தைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனால் அவனது இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் அருளப்பட்ட இறை வசனங்களின் தொகுப்பாகும். இது ஒரு குறிப்பிட்ட நாட்டினருக்கோ மொழியினருக்கோ சமூகத்துக்கோ அல்லது முஸ்லிம்களுக்கு   மாத்திரமோ அருளப்பட்டது அல்ல. மாறாக அகில உலக மக்களுக்கும் பொதுவாக அவர்களைப் படைத்தவனால் அருளப்பட்ட வழிகாட்டி நூலாகும்.   

இது இறைவனின் திருவேதமாகும், இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை.பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (திருக்குர்ஆன் 2:2)

இது இவ்வுலகின் உரிமையாளனான இறைவனின் அறிவுரைகள் என்பதாலும் அவனது இறுதி வேதம் என்பதாலும்   இன்று வாழும் மக்கள் யாவரும் இதன் படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள கடமைப் பட்டுள்ளார்கள்.

வாருங்கள், அந்த வேதத்தின் அடிப்படையில் நோய் பற்றியும், அதன் நிவாரணம் பற்றியும் பாவ நிவாரணம் பற்றியும் அறிந்து செயல்படுவோம்.

நோய் வந்தால்.......

நமக்கோ குழந்தைகளுக்கோ நமக்கு வேண்டியவர்களுக்கோ திடீரென நோய் வந்து விட்டால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.. நிம்மதியை இழந்து விடுகிறோம். சில அடிப்படையான விஷயங்களைப் புரிந்து கொண்டு அவற்றை மனதில் இருத்தி அதன்படி செயல்பட்டால் நோயும் குணமாகும், அந்த நோய் கொண்டுவரும் உடல்ரீதியான, மனரீதியான, மற்றும் பொருள்ரீதியான இழப்புகளில் இருந்தும்  நாம் நம்மை சுதாரித்துக் கொள்ளலாம்.

நோய் ஏன் வருகிறது?

முதலில் நோய் ஏன் வருகிறது? பல பதில்களை நாம் அறிந்திருந்தாலும் அது நம்மைப் படைத்தவன் புறத்திலிருந்து எச்சரிக்கை என்பதை அதிமுக்கியமாக நாம் உணர வேண்டும்! கண்களை மூடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் குதிரையை அதன் மேலுள்ள குதிரைஒட்டி மெதுவாக கடிவாளம் கொண்டு இழுக்கும் போது அக்குதிரை நிதானத்தை அடைகிறது. அதுபோன்ற ஒரு செயலே நோய் என்பதும்!

மனிதன் அன்றாட வாழ்க்கையில் ஈடுபடும்போது இறைவனைப் பற்றியோ, இறைவன் புறத்திலிருந்து அனுபவித்துக் கொண்டு வரும் எண்ணற்ற அருட்கொடைகளைப் பற்றியோ சிறிதும் பொருட்படுத்துவதில்லை. தன்னிலை மறந்து கண்ணை மூடியவனாக ஓடிக்கொண்டிருக்கும் அவன் அவனது உடல், பொருள் ஆவி என அனைத்துக்கும் சொந்தக்காரன் தன்னைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன்தான் என்பதை மறந்து விடுகிறான். அவனது கருணை இல்லாமல் தன்னால் இங்கு வாழ முடியாது என்பதையும் அவன் கொடுத்துவரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறான் என்பதையும் எளிதாக மறந்து விடுகிறான். அப்படிப்பட்ட மனிதனை நிதானப் படுத்த இறைவன் விடுக்கும் எச்சரிக்கையே நோய் என்பது! நோய் வரும் முன் வரை தனது உடல் இயக்கங்களை சமநிலையில் இயக்கிவந்த இறைவனின் கருணையை நினைவூட்ட வருகிறது நோய்! அவ்வாறு இறைவனை நினைவூட்டி மனிதனை பாவங்களில் இருந்து மீட்டு நல்லவனாக மாற்ற வருகிறது நோய்!

எனவே நோய் வரும்போது நாம் மிக மிக முக்கியமாக உணர வேண்டியவை :

படைத்தவனை உணர்வோம்

·       நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் கருணை மிக்க இறைவன் ஒருவன் இருக்கிறான்.

·       நாம் இதுவரை தங்கு தடையின்றி அனுபவித்து அருட்கொடைகளுக்கு நம் இறைவனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

·       அந்த ஒருவன் மட்டுமே நம் அனைவருக்கும் இறைவன். அவனை மட்டுமே நாம் வணங்க வேண்டும். அவன் மட்டுமே நம் பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்க முடியும். அவன் எப்படிப்பட்டவன்?

திருக்குர்ஆனில் இறைவன் தன்னைப் பற்றிக் கூறுகிறான் :

நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.  (திருக்குர்ஆன் 112: 1-4)

 (அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுள் என்றோ முஸ்லிம்களின் குலதெய்வம் என்றோ கருதி விடாதீர்கள். இவ்வுலகைப் படத்துப் பரிபாலித்து வரும் ஏக இறைவனுக்கு அரபு மொழியில் அல்லாஹ் என்று கூறப்படும். திருக்குரான் இறைவனைக் குறிக்க அந்த வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறது.)

அப்படிப்பட்ட இறைவனை நேரடியாக விளித்துப் பிரார்த்திக்க வேண்டும். நமக்கு வாய்த்துள்ள கஷ்டங்களையும் குறைகளையும் நீக்குமாறு முறையிட வேண்டும். நோயிலிருந்து விரைவில் நிவாரணம் நல்குமாறு கோர வேண்டும். நமது குறைகளை நமது இறைவனிடம் முறையிட எந்த இடைத்தரகர்களையும் நாடக்கூடாது. அவனுக்கு இணையாக வேறு யாரையும் தெய்வங்கள் என்று கருதி வணங்கக்கூடாது. இறைவன் அல்லாதவற்றை நோக்கி கடவுளே என்று அழைத்து அவனை இழிவு படுத்தக் கூடாது.

30:40 'அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.'

திருக்குர்ஆனில் இறைவன் நமக்கு இவ்வாறு பிரார்த்திக்குமாறு கற்றுத்தருகிறான். இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம் (குர் ஆன் 1 : 4)

·       படைத்தவனை விட்டு விட்டு அவனது படைப்பிங்களை வணங்குவதோ அவைகளிடம் பிரார்த்திப்பதோ நமக்கு எந்த பயனையும் தராது. அது பாவமாகும். அதனால் நோயும் குணமாகாது மாறாக இறைவனது கோபத்தை அது தூண்டும். திருமறை மூலம் இறைவன் கற்றுத்தருவதைப் பாருங்கள்

;'அவனே என்னைப் படைத்தான்; பின்னும் அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான். அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான். நான் நோயுற்ற கால்த்தில் அவனே என்னைக் குணப்படுத்துகிறான். மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.' (குர்ஆன் 26:78-81)

மேற்கண்டவற்றை உணர்ந்து நம்மைப் படைத்தவன்பால் திரும்பி  பாவ மன்னிப்பு கோர வேண்டும்.

அடுத்ததாக நாம் உணரவேண்டியது:

இவ்வாழ்க்கை என்பது ஓர் பரீட்சை

·       இவ்வுலக வாழ்க்கை என்பது தற்காலிகமானது. அழியக்கூடியது. இதை இறைவன் ஒரு பரீட்சைக் கூடமாக ஏற்படுத்தியுள்ளான்.

67:2 உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்¢ மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்,  மிக மன்னிப்பவன்.

·       ஒருநாள் இவ்வுலகம் முற்றாக அழிக்கப் படும். மீண்டும் இறைவனிடமிருந்து கட்டளை வரும்போது இவ்வுலகில் வாழ்ந்து மறைந்த அனைவரும்- அதாவது இப்பூமியின் மீது தோன்றிய முதல் மனிதனில் இருந்து கடைசி மனிதன்வரை அனைவரும்- மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பபடுவார்கள். அந்த நாள் தான் இறுதித்தீர்ப்பு நாள் எனப்படும்

·       எனவே இங்கு வாழும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளும் வசதிகளும் கொடுக்கப் படுகின்றன. சிலருக்கு செல்வமும் சிலருக்கு வறுமையும் சிலருக்கு ஆரோக்கியமான உடல்கட்டும் சிலருக்கு உடல் ஊனமும் என மாறி மாறி கொடுக்கப்பட்டு இங்கு மனிதர்கள் பரிசோதிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்ல, இங்கு அமைதி, அட்டூழியம் அக்கிரமம், நியாயம், அநியாயம் என பல சூழ்நிலைகளையும் கடந்து செல்ல வேண்டி வரும், இது ஒரு தற்காலிகமான சோதனைக்கூடம் என்பதால்!

மறுமை வாழ்க்கையே உண்மையானது   

21:35 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது¢ பரீட்சைக்காக கெடுதியையும் நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர் நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.

இங்கு இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு மறுமையில் சொர்க்கத்தைப் பரிசாக வழங்குகிறான். கட்டுப்படாமல் தான்தோன்றித் தனமாக வாழபவர்களுக்கு தண்டனையாக நரகத்தை வழங்குகிறான்.

·       நமது உண்மையான மற்றும் நிலையான முடிவில்லாத வாழ்க்கை என்பது மரணத்துக்குப் பிறகு உள்ள வாழ்க்கைதான். அது ஒன்று சொர்க்கத்தில் அமையும் அல்லது நரகத்தில் அமையும். இவை இரண்டும் அல்லாத வேறு ஒரு வாழ்க்கை கிடையாது.

·      இன்று நமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கை என்ற வாய்ப்பு ஒரே ஒரு முறை கிடைப்பது. மீண்டும் மீண்டும் பிறப்பது என்பது கிடையாது. அதுவும் அவரவரது மரணம் வரை மட்டுமே இவ்வாய்ப்பு நீடிக்கும்.

3:185 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்¢ அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான் உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்¢ எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்¢ இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.

·      எனவே இவ்வாழ்க்கை என்ற பரீட்சையில் சஞ்சலங்களுக்கு இடம் கொடாமல் உன்னிப்பாக, கவனமாக  ஒழுங்குற செயல்பட்டால் நாம் நிரந்தர இன்பங்கள் நிறைந்த மற்றும் சொர்க்கத்தை சென்றடைவோம். ஆனால் இப்பரீட்சையை உதாசீனமாக எடுத்துக்கொண்டு தான்தோன்றித்தனமாக செலவிட்டால் நாம் சென்று வீழ்வது நரகப்படுகுழியில்தான் அதுவோ முடிவில்லாத நிரந்தரமான இருப்பிடமாகும்.

மறுமை சாத்தியமா?

·      சொர்க்கம் நரகம் என்பது கற்பனையோ மாயையோ அல்ல என்பதை  சற்று சிந்தித்தால் உணரலாம். சாதாரண ஒரு இந்திரியத் துளியில் இருந்து உருவாகி இன்று பூமியில் நடமாடிக்கொண்டிருக்கிறோம். இது எப்படி வாஸ்தவமோ அதைவிட வாஸ்தவம் அது, இதை நடத்திக்கொண்டிருக்கும் இறைவனுக்கு நம்மை மீண்டும் படைப்பது என்பது கடினமானது அல்ல.

36: 77-79 ''மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ''எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?'' என்று. (நபியே!) நீர் கூறுவீராக! ''முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்'' என்று'

·      இறுதித்தீர்ப்பு நாளின்போது ஒவ்வொரு மனிதனும் இப்பூமியின் மீது செய்த புண்ணியங்களும் பாவங்களும்  எடுத்துக்காட்டப் படும். புண்ணியங்களை அதிகமாக சம்பாதித்தவர்களுக்கு சொர்க்கம் விதிக்கப்படும் பாவங்களை அதிகமாக சம்பாதித்தவர்களுக்கு நரகம் விதிக்கப்படும்.

சொர்க்கம் என்பது எப்படி இருக்கும்?

·      அது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடம். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது.. தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம்! என்றும் இளமையோடு இருக்கும் இடம்! காரணம் மரணம் என்பது இனி இல்லையல்லவா?

இதோ தனது திருமறையில் இறைவன் கூறுகிறான்:

10:9 நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர்வழி காட்டுவான்¢ இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.

43:71 பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும் இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன.  இன்னும், 'நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!' (என அவர்களிடம் சொல்லப்படும்.)

47:15 பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?

29:58 எவர்கள் இறைநம்பிக்கை; கொண்டு, நற்காரியங்கள் செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம். அவற்றில் அவர்கள்நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள். (இவ்வாறாக நற்)செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.

நரகமும் காத்திருக்கிறது

·       சொர்க்கத்தைப் போலவே நரகமும் மறுபுறம் காத்திருக்கிறது. அது இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்த கொடியோருக்காகவும் இறைவனையும் அவன் தூதர்களையும் வேதங்களையும் நிராகரித்தோருக்காகவும் காத்திருக்கிறது. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் நடுவே மரணமற்ற வாழ்வும் அகோர பசியும் தாகமும் அதைத்தீர்க்க உணவாக முட்செடிகளும் கொதிநிலை அடைந்த பானங்களும் என்று தொடர் வேதனைகளின் இருப்பிடமாக இருக்கும். நரக வேதனைகள் பற்றி திருக்குர் ஆன் எச்சரிக்கிறது:

20:74 நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ, அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது¢ அதில் அவன் மரிக்கவும் மாட்டான் வாழவும் மாட்டான்.

7:41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.

4:56 யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்¢ அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.

23:104 (நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை கரிக்கும்¢ இன்னும் அதில் அவர்கள் உதடு சுருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள்.

32:20 ஆனால் எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் - அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம் அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு: 'எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்'' என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.

78:21  நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.  வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக!  அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.!

18:29  (நபியே!) இன்னும் நீர் கூறுவீராக: 'இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது¢' ஆகவே விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்¢ (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்¢ அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்¢ மிகக் கேடான பானமாகும் அது! இன்னும் இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.

ஆக, நரக வேதனை என்பது தாங்க முடியாதது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் நாம் மரணத்திற்கு முன்பாக இறைவனிடம் மன்னிப்பு கோரி திருந்திய வாழ்க்கை வாழவேண்டும். இறைவன் நம் அனைவரையும் நரகிலிருந்து காப்பானாக! சொர்க்கம் செல்லும் நன்மக்களில் நம்மை சேர்த்து வைப்பானாக!

வாழ்க்கைப் பரீட்சையில் சோதனைகள் சகஜம்

அடுத்ததாக நாம் உணரவேண்டியது., இவ்வாழ்க்கை என்பது ஓர் பரீட்சை என்பதால் இதில் நோய் உட்பட பல சோதனைகளும் சகஜமாக வந்து செல்லும் என்பதே! இதை இறைவனே எடுத்துக் கூறுகிறான்:

2:155  'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

அவ்வாறு சோதனைகள் வரும்போது நாம் பதறாமல் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். வாழ்க்கையின் உண்மை நிலையை மனதில் இருத்தி நம்மை நாமே நிதானப் படுத்திக் கொள்ள வேண்டும். இதோ இறைவனே வழிகாட்டுகிறான்:

2:156-157     '(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.'

அதாவது நாம் இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள்  என்ற பேருண்மையை நினைவு கூர்ந்து பொறுமை காத்து ஆக வேண்டியவற்றை கவனித்தால் நமக்கு மன நிம்மதியும் ஏற்படும், இழப்பையும் இலாபகரமானதாக மாற்ற முடியும்! .....எப்படி? 

இறுதி இறைத்தூதர் முஹம்மது நபியவர்கள் கூறினார்கள்: சோதனைக்கு உள்ளான ஒருவர் இறைவன் இட்ட  கட்டளைப்படி இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள்) என்று கூறியபின் இறைவா, நான் படும் துன்பத்திற்கு கூலி வழங்குவாயாக, நான் இழந்ததை விட மேலானதைக் கொண்டு இதற்க்கு பகரம் வழங்குவாயாக! என்று பிரார்த்தித்தால் அவருக்கு இறைவன் மேலானதை வழங்குவான் (நூல்: முஸ்லிம்)  

நோய் வரும்போது பொறுமையைக் கடைப்பிடித்து இறைவனை நினைவுகூர்ந்து துதித்தால் நமது ஆரோக்கியத்தை முன்பிருந்ததைவிட இறைவனே செம்மைப் படுத்துகிறான்! இதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு அடியான் நோய்வாய்ப்பட்டு அவனை விசாரிக்க வருவோரிடம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பானாயின், இறைவன் என் அடியான் மீது எனக்கு கடமை இருக்கிறது. அவனை நான் இறக்க வைப்பின் அவனை சொர்க்கத்தில் நுழைய வைப்பேன். அவனை நான் குணப்படுத்தினால் அவனுடைய சதையை விட சிறந்த சதையையும் அவனுடைய இரத்தத்தை விட சிறந்த இரத்தத்தையும் மாற்றி அவனுடைய தீமைகளை அவனை விட்டும் அப்புறப்படுத்தி விடுவேன் என்று கூறுவான். (நூல் : முஅத்தா)

மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்:

  • மேற்கண்ட வாழ்வின் அடிப்படை உண்மைகளை நினைத்து மனதை உறுதிப்படுத்தி மேற்கொண்டு நோய்க்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். நோயை வாழ்வின் சோதனையாக ஏற்படுத்திய இறைவனே அதற்கு மருத்துவம் மேற்கொள்ளவும் பணிக்கிறான்.

மருத்துவம் செய்யுங்கள்! ஏனெனில் மரணம் என்ற நோயைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் அல்லாஹ் மருந்தை உருவாக்கியுள்ளான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)

ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு: மருந்து நோயை அடைந்தால் அல்லாஹ்வின் அனுமதியுடன் நோய் நீங்கிவிடுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

ஆனால் இறைவன் உண்ணக்கூடாது என்று தடுத்த பொருட்கள் மூலம் வைத்தியம் பார்க்கக்கூடாது.         

அல்லாஹ் நோயையும் அதற்குரிய மருந்தையும் உருவாக்கியுள்ளான். ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு. எனவே நீங்கள் மருத்துவம் செய்யுங்கள்! ஆனால், இறைவனால் தடை செய்யப்ட்ட பொருளின் மூலம் மருந்துவம் செய்யாதீர்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அபூதாவூத்

·      நம்மைப் படைத்த இறைவனிடம் மனப்பூர்வமாக நேரான சிகிச்சைக்கு வழிகாட்டுமாறு பிரார்த்த்தித்து விட்டு மருத்துவர்களை அணுக வேண்டும். எந்த மருத்துவத்தை மேற்கொண்டாலும் நோய் நிவாரணம் அவன் தருவதே என்பதை பரிபூரணமாக நம்ப வேண்டும். மருத்துவம் மேற்கொள்ளும்போது வரும் சோதனைகளையும் வேதனைகளையும் பொறுமையோடு எதிர் கொள்ள வேண்டும். அதில்தான் வாழ்கையின் வெற்றியே அமைந்துள்ளது.

மனத்தூய்மை பெறுவதைப் போலவே முக்கியமானது உடல் தூய்மையும் உடை, உணவு, இடம் போன்றவற்றின் தூய்மையும்! முக்கியமாக இவற்றை மலம, மூத்திரம் போன்ற அசுத்தங்களில் இருந்து தூய்மையாக வைத்திருத்தல் மிக மிக அவசியம். இறைபொருத்தத்திற்க்கும் நெருக்கத்திற்கும் தூய்மை ஒரு படிக்கல்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்: அல்லாஹ் தூயவன், அவன் தூய்மையான பொருட்களையே ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிடுகின்றான். மேலும் அல்லாஹ் கூறினான் : 'தூதர்களே! தூய ஆகாரத்தையே புசித்து நற்செயல் புரியுங்கள்!' (23 : 53)

2:172 நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்¢ நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்

நோயும் பாவ நிவாரணமும்:

நமது பாவங்களைக் கழுவி தூய்மையானவர்களாக ஆக்க கருணையாளனான இறைவன் ஏற்படுத்தித் தரும் ஒரு வாய்ப்பே நோய் என்பதை நாம் உணர வேண்டும். எனவே நோய் வரும்போது நாம் செய்து போன பாவங்களைப் பற்றியும் செய்து கொண்டிருக்கும் பாவங்கள் பற்றியும் நினைத்துப் பார்த்து இறைவனிடம் பாவங்களை மன்னிக்குமாறு மன்றாட வேண்டும். நமது பாவங்கள் இறைவனால் மன்னிக்கப்பட வேண்டுமானால் கீழ்கண்ட நிபந்தனைகளை நாம் பேண வேண்டும்.

·       பாவத்தை` பாவம் என்று உணர வேண்டும்.

·       மனம் வருந்தி உண்மை இதயத்தோடு இறைவனிடம் பாவ மன்னிப்பு கோர வேண்டும்.

·       மீண்டும் அதே பாவத்துக்குத் திரும்பக்கூடாது.

அதே வேளையில் .....

பிறருக்கு பாதிப்பு ஏற்படும் தீங்குகள் செய்திருந்தால் அவ்வாறு  பாதிக்கப் பட்டவர்களிடம்  மன்னிப்பு கோரி அவர்கள் மன்னிக்காத வரை இறைவன் அப்பாவங்களை மன்னிக்க மாட்டான் என்பதையும் நாம் அறியவேண்டும்.

நோய் நிவாரணத்துக்காக இறைவனிடம் பிரார்த்திப்பதற்க்கு முன்பாக நமது செயல்பாடுகளையும் நமது உடைமைகளையும் சம்பாத்தியங்களையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நமது பிரார்த்தனைகள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால்  நமது உணவும் உடையும் உடைமைகளும் தூய்மையான முறையில் சம்பாதிக்கப் பட்டதாக இருக்க வேண்டும். உதாரணமாக நமது உணவு, உடை, உறைவிடம் போன்றவை களவு, மோசடி, விபசாரம், வட்டி போன்ற பாவமான  வழிகளில் சம்பாதிக்கப் பட்டதாக இருக்குமானால் நமது பிரார்த்தனைகள் இறைவனால் அங்கீகரிக்கப் படுவதில்லை.  

பெருமானார் நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதனைப் பற்றி குறிப்பிட்டார்கள். “அவன் நெடிய பயணம் மேற்கொண்டு புழுதி படிந்து அழுக்கடைந்த நிலையில் புண்ணியத்தலத்துக்கு வருகின்றான். தனது இரு கரங்களையும் வானத்தை நோக்கி உயர்த்தி 'என் இறைவனே!'(என்று இறைஞ்சுகிறான்). ஆயினும் அவன் உண்ணும் உணவு பருகும் நீர் உடுத்தியிருக்கும் ஆடை அனைத்துமே ஹராமானவை - தடுக்கப்பட்ட வழியில் வந்தவை. அவன் முழுமையான ஹராமிலேயே வளர்ந்துள்ளான். அவ்வாறெனில் இத்தகையோனின் இறைஞ்சுதல் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்? (முஸ்லிம்)

அவ்வாறு நம்மிடம் இருக்கும் சம்பாத்தியம் தடுக்கப்பட்ட வழிகள் மூலம் பெறப்பட்டதாக இருந்தாலோ, அல்லது நாம் யாருக்காவது வேறு விதமான மோசடிகளோ அநியாயமோ செய்து இருந்தாலோ, அல்லது  பிறர் பொருட்களையோ உடமைகளையோ அநியாயமான முறையில் அபகரித்து இருந்தாலோ உடனடியாக இறைவனுக்கு பயந்து அவற்றிலிருந்து மீண்டு விட வேண்டும். காரணம் நாம் செய்த அநியாயத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் நம்மை மன்னிக்காதவரை இறைவன் நம் பாவத்தை மன்னிப்பதில்லை.

நோய் நிவாரணம் தாமதமானால்.....?

இவ்வாழ்க்கை என்பது பரீட்சை என்பதால் சில வேளைகளில் நோய் நிவாரணம் தாமதமாகும். அப்போதும் நாம் பொறுமையை இழக்காமல் புரிந்து கொள்ளவேண்டிய உண்மை என்னவென்றால் அதுவும் நமக்கு நன்மையை தாங்கி வருகிறது என்பதே! எப்படி? நம்மை இறைவன் மேலும் மேலும் நம் பாவங்களை விட்டு  தூயமைப்படுத்த விரும்புகிறான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: காய்ச்சலை நீங்கள் ஏசாதீர்கள், காரணம், நெருப்பு இரும்பை தூய்மைப் படுத்துவது போல அது உங்கள் பாவங்களை போக்கிவிடும்.

முறைப்படி மருத்துவம் மேற்கொண்ட பிறகும் பொறுமை மேற்கொண்ட பிறகும் போகப் போக நோய் நம்மை மரணத்தின் விளிம்புக்கும் கொண்டு செல்லலாம். அப்போதும் நாம் பொறுமையையும் நம்பிக்கையையும் கைவிடக்கூடாது. ஆனால் சோதனைகள் எவ்வளவுதான் அதிகமானாலும் பொறுமையை இழந்து மரணத்தைத் தா என்று இறைவனிடம் அவசரப்பட்டு பிரார்த்திக்கக் கூடாது. தற்கொலை அல்லது கருணைக்கொலை என்று எதையும் நாடக்கூடாது. மரணத்துக்கு முன்னதாக சோதனைகள் அதிகரித்தால் இறைவன் தன் அடியானை அவனது பாவங்கள் முழுமையாக கழுவப்பட்ட நிலையில் அவனது உயிரைக் கைப்பற்ற விரும்புகிறான் என்று பொருள். இதுவும் நபிகளாரின் கூற்றே!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் உங்களுக்கு ஏற்படும் சோதனை காரணமாக மரணத்தை விரும்பி பிரார்த்திக்க வேண்டாம். அவ்வாறு நிர்பந்தம் ஏற்பட்டால் இவ்வாறு கேளுங்கள்: இறைவா எனக்கு வாழ்வு நல்லதாக இருக்கும் வரை என்னை வாழ வை. மரணம்  நல்லதென்றால் என்னை மரணிக்கச் செய்வாயாக!’”( நூல் : புஹாரி)

ஆக, எந்நிலையிலும் நிதானம் இழக்காமல் இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டு செயல் பட்டால் சோதனைகளை உண்மையான சாதனைகளாக மாற்றலாம்!

நோயின்போது ஒதிப்பார்க்க கூடிய திருக்குர்ஆன் வசனங்களும் நபிகளார் கற்றுத் தந்த பிரார்த்தனைகளும்:

நோயின்போது மருத்துவம் பார்ப்பதோடு திருக்குர்ஆன் வசனங்களையும் ஓதிப் பார்க்கலாம். திருக்குர்ஆன் பற்றி இறைவனே கூறுகிறான்:

இது (திருக்குர்ஆன்) நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும், நிவாரணியகவும் இருக்கும் என்று (நபியே!) நீர் கூறுவீராக…” (திருக்குர்ஆன் 41:44)

மேலும் கூறுகின்றான்:

மேலும் நம்பிக்கையாளர்களுக்கு நிவாரணியாகவும் அருளாகவும் உள்ளவற்றையே இக்குர்ஆனில் நாம் இறக்கியுள்ளோம். அது அநியாயக்காரர்களுக்கு நஷ்டத்தை தவிர வேறெதையும் அதிகரிக்காது (திருக்குர்ஆன் 17:82)

மனிதர்களே! உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசமும் உள்ளங்களில் உள்ளவற்றிற்கு நிவாரணியாகவும் நம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியும், கருணையும் நிச்சயமாக வந்துவிடும் (திருக்குர்ஆன் 10:57)

 எனவே நீங்கள் பயன்படுத்திக் கொள்வதற்காக சில முக்கியமான திருக்குர்ஆன் வசனங்களை கீழே தருகிறோம். நம்மைப் படைத்தவனிடம் கலப்படம் அற்ற தூய்மையான நம்பிக்கை கொண்டு இவ்வசனங்களின் பொருளுணர்ந்து நீங்களாகவே ஓதிப் பார்த்துக் கொள்ளலாம். முக்கிய நிபந்தனை என்னவென்றால் இறைவனுக்கு இணைவைக்காதவர்களாக நாம் இருக்கவேண்டும்.

அதற்கு கீழ்காணும் உறுதி மொழியை மனதார ஒப்புக்கொண்டு வாயால் மொழிய வேண்டும். பின்னர் அதில் நிலைத்திருக்க வேண்டும்.

அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (வணக்கத்துக்கு உரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாருமே இல்லையென்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்றும் நான் ஏற்றுக்கொண்டு சாட்சி கூறுகிறேன்) 

திருக்குர்ஆன் முதல் அத்தியாயம்:

 

திருக்குர்ஆனின் ஆரம்ப அத்தியாயத்தின் பெயர் பாத்திஹா என்பது. இது ஏழு வசனங்களைக் கொண்டது.  இதை பொருளுணர்ந்து ஓதி நோய்வாய்ப்பட்டவர் மேல் ஓதி ஊதலாம். அந்த வசனங்களை அவற்றின் பொருள் சகிதம் கீழே தருகிறோம்:

.        1. (B)பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

.        2. அல்ஹம்து லில்லாஹி ர(B)ப்பில் ஆலமீன்.

.        3. அர்ரஹ்மானிர் ரஹீம்.

.        4. மாலிகி யவ்மித் தீன்

.        5. இய்யாக்க நஉ(B)புது வஇய்யாக்க நஸ்தஈன்.

.        6. இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்த்தகீம்

.        7. ஸிராத்தல்லதீன அன் அம்த அலைஹீம் அய்ரில் மக்லூ(B)பி அலைஹீம் வலழ்ழால்லீன் ஆமீன்

 

பொருள்:

.        (1. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் (இதை ஒதுகிறேன்)

.        2. அனைத்துப் புகழும் அனைத்து உலகையும் படைத்து பரிபாலித்து வரும்  அல்லாஹ்வுக்கே உரியது.

.        3. அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.

.        4. இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதி.

.        5. உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

.        6. எங்களை நேரான வழியில் நடத்துவாயாக

.        7. நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்களின் வழியில் நடத்துவாயாக,. அது உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியும் அல்ல.

.        அமீன்- எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக)

 

முக்கிய குறிப்பு இந்த அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் இறைவனே நமக்கு கற்றுத்தரும் பிரார்த்தனைகள். இங்கு நான்காவது வசனத்தை மிக ஆத்மார்த்தமாக கூற வேண்டும் இறைவா படைத்தவனாகிய உன்னை மட்டுமே வணங்குவோம். உன்னையல்லாது வேறு யாரையும் தெய்வமாக பாவிக்க மாட்டோம்.அவைகளிடம் பிரார்த்திக்கவோ உதவி கோரவோ மாட்டோம் என்ற உறுதி மொழியை இதன் மூலம் நாம் இறைவனுக்கு கொடுக்கிறோம் என்பதை உணர்க! நம் பிராத்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இது ஒரு நிபந்தனை என்பதை அறிக!

ஆயத்துல் குர்ஸி எனப்படும் சிறப்பு வசனம் :

திருக்குர்ஆனின் கீழ்கண்ட வசனம் மறைமுகமான தீமைகளில் இருந்து பாதுகாப்பு தரக்கூடியது. இவ்வுலகில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம் கண்களுக்குப் புலப்படாத ஓர் இனம் ஜின் இனம் என்பது. இவர்களும் நம்மப் போலவே சமூகங்களாக வாழ்பவர்கள். நம்மில் உள்ளது போலவே இவர்களிலும் ஆண், பெண் என்றும் நல்லவர்கள், கெட்டவர்கள் என்றும் சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்கள், மறுப்பவர்கள் என்றெல்லாம் உண்டு. ஷைத்தான் ஜின் இனத்தைச் சேர்ந்தவனே. யாராவது காலையிலும் மாலையிலும் இந்த ஆயத்துல் குர்ஸியைப் படித்தால் ஜின்களின் தீமையில் இருந்து பாதுகாக்கப் படுவார். என்பது நபி மொழி. (நூல்: ஹாகிம்)

அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம். லா தஉஹுதுஹு சினத்துன் வலா நவ்ம். லஹு மா(F)பிஸ் ஸமாவாதி வாமா (F)பில் அர்ழ். மன் தல்லதீ யஷ்(F)பஹு இன்தஹு இல்லா (B)பிஇதினிஹீ. யலமு மா (B)பய்ன அய்தீஹீம் வமா ஹல்(F)பஹும் வலா யுஹீதூன (B)பி ஷைஇன் மின் இல்மிஹீ இல்லா (B)பீமா ஷாஅ வசிஹ குர்ஸியுஹுஸ் ஸமாவாதி வல் அர்ழி. வலா யஊதுஹு ஹி(F)ப்ளுஹுமா வஹுவல் அலியுல் அழீம்.

(பொருள் :வணக்கத்துக்கு உரிய இறைவன் அல்லாஹுவைத் தவிர யாருமில்லை. அவன் என்றென்றும் உயிர்வாழ்பவன். நிலையானவன்., சிறு துயிலோ உறக்கமோ அவனை பீடிக்காது.. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தம். அவனுடைய அனுமதியின்றி அவனிடம் பரிந்து பேசுவோர் யார் இருக்கிறார்கள்? அவர்களுக்கு முன்னால் இருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவனுடைய நாட்டமின்றி அவனுடைய அறிவில் உள்ளவற்றிலிருந்து யாதொன்றையும் அவர்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள். அவனது குர்ஸிய்யு  வானங்களிலும் பூமியிலும் விசாலமாக (பரவி) இருக்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்காது. மேலும் அவன் மிக்க உயர்ந்தவன், மகத்துவமிக்கவன்..)

கீழே தரப்பட்டுள்ள திருக்குர்ஆனின் இறுதி அத்தியாயங்களும் பொருளுணர்ந்து ஓதி ஊதத் தக்கவை. கீழ்கண்ட செய்தியில் கண்டவாறு தினமும் இதை நீங்கள் செய்யலாம்.

நபிகளாரின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்: 
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் படுக்கைக்குச் சென்றால் குல்ஹுவல்லாஹு அஹத்,  குல்அஊது பிரப்பில் ஃபலக்,  குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய பாதுகாப்புக் கோரும் (112, 113, 114) அத்தியாயங்கள் மூன்றையும் ஓதித் தம் உள்ளங்கைகளில் ஊதி அவற்றால் தம் முகத்தையும், தம் இரண்டு கரங்கள் உடலில் எங்கெல்லாம் படுமோ அந்த இடங்களையும் தடவிக் கொள்வார்கள். அவர்கள் நோயுற்றபோது நான் அவர்களுக்கு அதைச் செய்து விடும்படி என்னைப் பணிப்பார்கள். (புஹாரி)

இதில் முதலாவது அத்தியாயம் இறைவனின் குணாதிசயங்களை நமக்கு கூறுகிறது. எப்படிப்பட்ட வல்லமை வாய்ந்த இறைவனிடம் நமது பிரார்த்தனைகளை முன்வைக்கிறோம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. பின்னர் வரக்கூடிய அத்தியாயங்களில் நமது கண்களுக்கு புலப்படும் மற்றும் புலப்படாத இருள், பில்லி, சூனியம், செய்வினை, கண்ணேறு போன்ற  தீமைகளிளிருந்தும் தீய சக்திகளில் இருந்தும் பாதுகாவல் பெற நாம் என்ன கூறவேண்டும் என்பதை இறைவன் கற்றுத் தருகிறான். இப்படிப்பட்ட தீமைகளில் இருந்து பாதுகாவல் பெற ஒரே வழி இறைவனிடம் நேரடியாக முறையிடுவதே என்பதை உணர வேண்டும். மாறாக, இடைத்தரகர்களை அணுகுவதோ குறுக்கு வழிகளைத் தேடுவதோ எந்த பயனையும் தராது. எல்லா மறைவான மற்றும் வெளிப்படையான சக்திகள் மீதும் ஆதிக்கம் பெற்ற ஒரே ஒருவன் படைத்தவன் மட்டுமே, அவனது அனுமதியின்றி எந்த சக்தியும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது என்பதை ஆணித்தரமாக நம்ப வேண்டும்.

திருக்குர்ஆன்  அத்தியாயம் 112

(B)பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1.     குல் ஹுவல்லாஹு அஹத்

2.     அல்லாஹுஸ் சமத்.

3.     லம் யலித் வலம் யூலத்.

4.     வலம் யகுன் லஹு கு(F)புவன் அஹத்

பொருள் :

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் (இதை ஒதுகிறேன்)

1.     சொல்வீராக அவனே அல்லாஹ் அவன் ஒருவனே.

2.     அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன்.

3.     அவன் யாரையும் பெறவும் இல்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை.

4.     அவனுக்கு நிகராக யாருமே இல்லை.

திருக்குர்ஆன்  அத்தியாயம் 113

(B)பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1.     குல் அஊது (B)பி ர(B)ப்பில் (F)பலக்.

2.     மின் ஷர்ரி மா ஹலக்

3.     வமின் ஷர்ரி ஆசிகின் இதா வகப்

4.     வமின் ஷர்ரின் ன(F)பாசாத்தி (F)பில் உகத்

5.     வமின் ஷர்ரி ஹாசிதின் இதா ஹசத்.

பொருள் :

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் (இதை ஒதுகிறேன்)

1.     சொல்வீராக: “விடியலின் இறைவனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

2.     அவன் படைத்த வற்றின் தீங்குகளில் இருந்து.

3.     இருள் பரவிய நேரத்தில் அந்த இருளின் தீங்கை விட்டு.

4.     முடிச்சுக்களில் மந்திரித்து ஊதும பெண்களின் தீங்கை விட்டும்.

5.     பொறாமைக்காரன் பொறாமை கொண்ட நேரத்தில் அவனது தீங்கை விட்டும் (நான் காவல் தேடுகிறேன்)

திருக்குர்ஆன்  அத்தியாயம் 114

(B)பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

1.     குல் அஊது (B)பி ர(B)ப்பின் நாஸ்

2.     மாலிக்கின் நாஸ்

3.     இலாஹின் நாஸ்.

4.     மின் ஷர்ரில் வஸ்வாஸில் ஹன்னாஸ்

5.     அல்லதீ யுவஸ்விஸு (F)பீ சுதூரின்னாஸ்

6.     மினல் ஜின்னத்தி வன்னாஸ்

பொருள் :

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும் ஆகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் (இதை ஒதுகிறேன்)

1.     சொல்வீராக: மனிதர்களின் இறைவனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்,

2.     அவன் மனிதர்களின் அரசன்.

3.     மனிதர்களின் வணக்கத்துக்கு உரியவன்.

4.     பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (நான் காவல் தேடுகிறேன்.)

5.     அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.

6.     (இத்தகையோர்) ஜின் மற்றும் மனித வர்க்கங்களில் இருக்கின்றனர்.

 

நபிகளார் கற்றுத்தரும் பிரார்த்தனைகள்:

நம் உடலில் எங்காவது வேதனையை உணர்ந்தால்:

வேதனை ஏற்பட்ட இடத்தின் மீது கையை வைத்து பிஸ்மில்லாஹி (அல்லாஹ்வின் பெயரால்) என்று மூன்று முறை கூறவேண்டும். தொடர்ந்து அ ஊது (B)பில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷர்ரி  மா அஜிது வ உஹாதிரு என்று ஏழு முறை கூற வேண்டும்.

(பொருள்: எனக்கு வந்திருக்கின்ற மற்றும் நான் பயந்து கொண்டிருக்கின்ற தீமையில் இருந்து நான் அல்லாஹ் மற்றும் அவனது ஆற்றலைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்) (நூல்: முஸ்லிம்)

நோய் நிவாரணம் பெற நபிகளார் கற்றுத்தரும் பிரார்த்தனை:

'நோயாளி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டால்' அவர்கள், 'அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்' என்று பிரார்த்திப்பார்கள். 


(
பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை.

குழந்தைகளுக்கான பிரார்த்தனை:

உஈதுகுமா (B)பி கலிமாத்தில்லாஹித் தாம்மத்தி மின் குல்லி ஷைத்தானின் வ ஹாம்மத்தின் வமின் குல்லி அயனின் லாம்மத்தின் 

(பொருள் : ஒவ்வொரு ஷைத்தான் மற்றும் விஷ ஜந்துக்களின் (தீமையி)லிருந்து இன்னும் பட்டுவிடக்கூடிய ஒவ்வொரு கண்ணி(ன் பார்வையி)லிருந்து அல்லாஹ்வின் நிறைவான வாக்குகளைக் கொண்டு உங்களிருவருக்கும் நான் பாதுகாவல் தேடுகிறேன்.)

மேற்கண்ட பிரார்த்தனையை நபிகளார் அவரது பேரன்களான ஹசன் மற்றும் ஹுசைன் அவர்களுக்காக செய்தார்கள்.

நோயாளிக்கு நலம் விசாரிக்கையில் பிரார்த்தனை:

அஸ்அலுல்லாஹல் அழீம். ர(B)ப்பில் அர்ஷில் அழீமி அன் யஷ்(F)பியக (7 முறை)

(பொருள் : பிரமண்டாமான சிம்மாசனத்தை உடையவனாகிய மகத்துவமிக்க  அல்லாஹ்விடம் உமக்கு ஆரோக்கியத்தை நல்குமாறு நான் கேட்கிறேன்)

விஷ ஜந்துக்களின் தீங்கிலிருந்து பாதுகாப்பு பெற:

அஊது (B)பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா ஹலக்

(பொருள்: அவன் படைத்தவற்றின் தீங்குகளை விட்டு அல்லாஹ்வின் முழுமையான வார்த்தைகளின் துணைகொண்டு நான் காவல் தேடுகிறேன்.)  

நோயிலிருந்து நிவாரணம் பெற்றால்.......?

இறையருளால் நாம் நோய் நிவாராணம் பெற்றுவிட்டோமானால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

தொடர்ந்து பாவ மன்னிப்பு கோரியவர்களாகவும்  நன்றிக்கடன் செலுத்தியவர்களாகவும் வாழ வேண்டும். இறைவன் நமக்கருளியுள்ள பொருளாதாரத்திளிருந்து அதிகமாக ஏழைகளுக்கு தான தர்மங்கள் செய்ய வேண்டும். ஒருபோதும் அவன் கருணையை மறந்து விட்டு நாம் முன்னர் செய்து கொண்டிருந்த பா.வங்களுக்கு மீண்டும்  திரும்பி விடக் கூடாது. குறிப்பாக மீண்டும் படைப்பினங்களையோ உருவங்களையோ சமாதிகளையோ வணங்கக் கூடாது. காரணம் இறைவனுக்கு இணைவைத்தல் என்பது மிகப் பெரிய பாவமாகும்.  யார் இப்பாவம் செய்கிறார்களோ அவர்களுக்கு நிரந்தர நரகம்தான்!

30:33 மனிதர்களுக்கு (பசி, நோய், வறுமை, பஞ்சம் போன்ற ஏதேனும்) சங்கடம் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி, (அதை நீக்கியருள) அவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்¢ பிறகு அவன் அவர்களுக்கு தன்னிடமிருந்து அருளை  சுவைக்கச் செய்தால், அவர்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கு இணை வைக்கின்றனர்.

அப்படி மீண்டும் இணைவைப்பு போன்ற பாவங்களுக்கு மீண்டும் திரும்புவோரை கீழ்கண்ட வசனங்கள் மூலம் எச்சரிக்கிறான். கடலில் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றப் பட்ட கப்பல் பயணிகளின்  உதாரணம் மூலம் விளக்குகிறான், பாருங்கள்:

17:67 இன்னும், கடலில் உங்களை ஏதேனும் தங்கடம் (துன்பம்) தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவையாவும் மறைந்து விடும். எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள் – இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.

17:68 (கரை சேர்ந்த) பின் அவன் உங்களை பூமியின் ஒரு புறத்தில் புதையும்படி செய்து விடமாட்டான் என்றோ, அல்லது உங்கள் மீது கல்மாரியை அனுப்பமாட்டான் என்றோ அச்சந் தீர்ந்து இருக்கிறீர்களா? பின்னர் நீங்கள் உங்களைப் பாதுகாப்போர் எவரையும் காண மாட்டீர்கள்.

17:69 அல்லது, அவன் மீண்டும் ஒரு தடவை அக்கடலில் உங்களை மீளச் செய்து, (எல்லாவற்றையும்) முறித்துத் தள்ளும் புயல் காற்றை உங்கள் மீதனுப்பி நீங்கள் நிராகரித்ததற்காக உங்களை மூழ்கடித்து விடமாட்டான் என்றும் நீங்கள் அச்சந்தீர்ந்து இருக்கிறீர்களா?

 ;.எக்காரணத்தைக் கொண்டும் நாம் நமது உண்மை நிலையை மறந்து விடக் கூடாது. நாம் நம்மைப் படைத்து பரிபாலிக்கக் கூடிய இறைவனை மட்டுமே வணங்க வேண்டியவர்கள். அவனிடமே நாம் மரணத்திற்குப் பிறகு மீளவேண்டியுள்ளது, நமது பாவ புண்ணியங்களுக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது. முடிவில்லாத மறுமை வாழ்க்கை காத்திருக்கிறது என்ற அடிப்படை உண்மைகளை ஒருக்காலும் மறந்து விடக்கூடாது! அதை நினைவூட்ட வந்ததுதான் நோய்! 

 ஆம் அன்பர்களே,

ஒரு கல்லூரியில் ஆத்மார்த்தமாக சிரமங்கள் மேற்கொண்டு படிப்பவனுக்கு சிறந்த வாழ்கையும் தான்தோன்றியாக கல்வியை உதாசீனம் செய்பவனுக்கு மோசமான  வாழ்கையும் அமைவது நியதி. அதைப்போல இவ்வாழ்க்கை என்ற பரீட்சைக்களத்தில் இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்வோருக்கு அவர்களின் உழைப்புக்காக சொர்க்கத்தையும் கீழ்படியாதோருக்கு தண்டனையாக நரகத்தையும் வழங்கவிருப்பது படைத்தவனின் தீர்மானம். அதைப் புரிந்துகொண்டு அதன்படி வாழ்வதே அறிவுடைமை.

   நம்மைக் காத்து வரும் அளவிலாக் கருணையாளனான இறைவன் நம்  மீது பேரன்பு கொண்டவன். அவன் வைத்துள்ள இபரீட்சையில் நாம் தேர்வு பெற்று சொர்க்கத்தை அடையவேண்டும் என்பதற்காக பல வழிகளை ஏற்படுத்தியுள்ளான். அவற்றில் ஒன்றுதான் நோய்!

      எனவே நோய் வரும்போது நம்மிடம் உடனடியாக வரவேண்டியது இறைவனுக்குப் பணிதல் என்ற பண்பு. அதன் மூலம் மட்டுமே இத்தேர்வில் வெற்றி பெற முடியும். இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.

6:42. (நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும்வறுமையைக் கொண்டும் பிடித்தோம் அவர்கள் பணிந்து வரும் பொருட்டு.

  எவ்வாறு இறைவனுக்குப் பணிவது? அவன் தன் வேதம் மூலமும் தூதர் மூலமும் நமக்குக் கற்றுத்தரும் ஏவல்-விலக்கல்களை அறிந்து அதன்படி வாழ வேண்டும். அவ்வாறு செய்தால் நாம் மட்டுமே நமக்கு வெற்றி!

======================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?